ஹெப்ரான் சர்ச்சுக்கு சீல் வைத்தார்களா–இல்லையா, சிஎம்டிஏ பணம் வாங்கியதா–இல்லையா, சிஎம்டிஏ–வை கலைத்து விட்டால் என்ன – கேட்பது உயர்நீதி மன்றம்! [2]
கே. பி. எடிசன் 2011ல் திமுகவை ஆதரித்தது[1]: கலைஞர் டிவி நடத்திய பாதிரிகளின் பிரச்சாரக்க் கூட்டம்: இது 08-04-2011 (6.30 – 7.30) மற்றும் 09-04-2011 (11.30 – 12.30) இருமுறை ஒளிபரப்புச் செய்யப் பட்டுள்ளது. அதில், கே. பி. எடிசன் பேசியது, “மதம் மாற்றச் சட்டம் இருந்தபோது, பல அடக்குமுறைகள் செய்யப்பட்டன. அச்சட்டம் நீங்க நாங்கள் இந்தியா முழுவதும் பிரார்த்தனை செய்தோம். மதம் மாறுவது என்பது பரிசுத்த ஆவி செய்கிறது. நான் கூட ஒரு ஆர்க்கிடெக்ட்டாக இருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டது…… (பிரச்சார ரீதியில் அதிகமாக விவரிக்கும் போது, நிருபர் குறிப்பிட்ட விஷயத்திற்கு இழுக்கிறார்). சர்ச் கட்டுவதற்கு கலெக்டர் அனுமதி வேண்டும் என்றமுறை இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்குத் தெரியவில்லை–புரியவில்லை. ஆனால், சமீபத்தில் அவ்வாறு தேவையில்லை என்று கருணாநிதி ஆணையிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசு நிலத்தை எங்களுக்குக் கொடுத்து, அதில் சர்ச் கட்டிக் கொள்ள செய்துள்ளார். இந்துக்கள் காஷ்மீரத்தில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; பஞ்சாபில் மைனாரிட்டியாக இருக்கிறார்கள்; அந்நிலையில் மற்ற இடங்களிலும் துன்புறுத்தப் பட்டால், என்னவாகும் என்று யோசிக்கவேண்டும்”. சர்ச் கட்டிக்கொள்வதற்கு கருணாநிதி இடம் கொடுத்தார் என்பது திகைப்பாக இருக்கிறது. அரசியல் ஆதரவை வைத்துக் கொண்டால், சட்டங்களை மீறலாம் போன்ற செயல்பாடுகள், சமூகத்தில் அமைதியை உண்டாக்காது,
தனிமனித சட்டமீறல்கள் மற்றும் குற்றங்களுக்கு அவரவர்கள் தான் பொறுப்பாவார்கள்: எதற்கெடுத்தாலும், மோடியைத் தாக்குவது என்ற நிலைப்பாடுள்ளதும் விசித்திரமாக உள்ளது. இங்கு பொறுத்தவரை, 2006லிருந்தே பிரச்சினை இருக்கும் போது மோடி எங்கிருந்தார் என்று தெரியவில்லை. தனிமனித மற்றும் கிருத்துவர் – எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று தொடர்ந்து சட்டங்களை மீறி வருவது, வாடிக்கையாக உள்ளநிலையில், அவற்றை மறைத்து, இன்னொருவர் மீது பழி போட்டு, நாடகம் ஆடுவது திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், உண்மையில் இந்த சட்டமீறல்களில், குற்றங்களில், யார் தாக்கப்படுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். டிசம்பர் 2017ல் ஒன்றும் தெரியாத அப்பாவி போல, இதே எடிசன், மற்ற கிருத்துவ கோஷ்டிகளுடன் சேர்ந்து கொண்டு [ஜான் தயாள் உட்பட] ஏதோ சர்ச்சுகள் எல்லாம் தாக்கப்படுகின்றன, உடனே நிறுத்துங்கள் என்று கூப்பாடு போட்டது தமாஷாக இருந்தது. அந்த அருமையான செய்தியை “தி இந்து” தான் வெளியிட்டது[2]. ஜான் தயாள் தமக்கே உரிய பாணியில், இந்தியாவில் சர்ச்சுகளுக்கு எதிரான வன்முறை தாக்குதல்கள் 250 நடந்துள்ளதாகவும், அவற்றில் 30 தமிழகத்தில் நடந்துள்ளதாக கூறியது வேடிக்கையாக இருந்தது[3].
இதே சர்ச்சின் செயல்பாடு, வழக்கு பற்றி 2018ல் தி.இந்து செய்தி வெளியிடும் விதம்: இப்பொழுது, அதே “தி.இந்து” இப்பிரச்சினையைப் பற்றி, செய்தி வெளியிடும் போது[4], “It was during the hearing of a case related to the unauthorised construction of a multi-storey building in Nungambakkam here that the judges were told that the CMDA as well as Corporation officials lacked the manpower required to check unauthorised constructions. They were also told that the police officers seldom cooperated with the officials of the civic bodies,” என்று குறிப்பிட்டாலும், அது கே.பி.எடிசனின் மனு என்று குறிப்பிடவில்லை. ஆகவே, ஒரே நபர், ஒரே கட்டிடம், ஒரே – அதே வழக்கு, என்றாலும், இப்படி சாமத்தியமாக உண்மைகளை, அறியப்பட வேண்டிய சாதாரண தகவல்களை வெளிடாமல் இருப்பது, எத்தகைய பத்திரிகா தமத்தைச் சேர்ந்தது என்று தெரியவில்லை.” hearing a petition on a church, which was built by encroaching the building belonging to the corporation in Nungambakkam, Chennai” என்று மற்ற ஆங்கில நாளிதழ்கள் வெயிட்டபோது, உண்மைகளை, மக்கள் அறிய வேண்டிய தகவல்களை, “தி.இந்து” மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இதில் வேடிக்கை என்னவென்றால், என், ராமின் மீதே நில அபகரிப்பு புகார், வழக்கு உள்ளது, அதனால் தான், தற்காலிகமாக, பதவி விலகி இருப்பதும் தெரிந்து விட்டது. இதுதான் “தி.இந்து”வின் கிருத்துவ சார்பினை எடுத்துக் காட்டுகிறது. அது “மார்க்ஸியத்துடன்” சேர்ந்து கொண்டு, செக்யூலரிஸ போர்வையில் உலா வந்து கொண்டிருக்கிறது. அப்பாவி வாசகர்களை ஏமாற்றி வருகின்றது.
தி.இந்து-கிருத்துவ-மார்க்ஸீய சார்புடையதாக இருக்கிறாதா-இல்லையா?: என். ராம் இப்பொழுது, மிரியம் சாண்டி என்கின்ற, “மாமன்-மாப்பிள்ளை” குழுமத்தின் பெண்ணை மனைவியாகக் கொண்டிருக்கிறார், சிபிசிஐ மாநாட்டில் பேசுகிறார், கிருத்துவத்திற்கு சாதகமாக இருக்கிறார் என்றெல்லாம் தெரிகிறது. இதெல்லாம் அவரது தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கை விருப்பு-வெறுப்புளாக இருக்கலாம். அவற்றைப் பற்றி மற்றவர் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்த விருப்பு-வெறுப்புகள்: மற்றவரை, குறிப்பாக இந்திய மக்களை, சமூகத்தை பாதிக்கின்றன, சித்தாந்த ரீதியில் இருந்து கொண்ட, குறிப்பிட்ட மக்களுக்கு சாதகமாக-விரோதமாக இருக்கின்றன, அத்தகைய கருத்துருவாக்கங்களில் ஆதிக்கம் செல்லுத்த வலுக்கட்டாயமாக உபயோகப் படுத்தப் படுகிறது, மற்ற கருத்துகளை அமுக்கி, மறைத்து, அவை செயல்படுகின்றன என்ற நிலயுண்டாகும் போது, மற்றவர்களும் லவனிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
2018ல் நீதிமன்றம் கேள்விகள் எழுப்பியது: 11-01-2018 அன்று கே.பி.எடிசன் போட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மார்ச் மாதம் வரை, விதிமீறல்களை சரிசெய்ய, கால அவகாசம் கொடுத்தது. ஆனால், எடிசன் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை போலும். இதனால், இப்பொழுது மத்திய தணிக்கைக்குழு அறிக்கையில், சிஎம்டிஏயின் மெத்தனப் போக்கே, 2015-டிசம்பர் வெள்ளத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டது. அந்நிலையில் ஹெப்ரான் சர்ச்சின் மனு மறுபடியும், சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்பாக வந்தபோது[5], ஏற்கெனவே நடந்துள்ள வழக்கின் போக்கை அறிந்து, இவ்விசயத்தில், சிஎம்டிஏ இவ்வாற்று நடந்து கொள்வது ஏன், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அமைதியாகி விட்டனரா[6], இப்படி வேலைசெய்யாமல் இருக்கும் இந்த சிஎம்டிஏ-வை கலைத்து விட்டால் என்ன[7], என்றெல்லாம் சரமாரியாகக் கேள்விகள் நீதிபதிகளால் எழுப்பப் பட்டன[8]. நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி முன்பாக, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. 2006லிருந்தே, ஹெப்ரான் சர்ச், இவ்வழக்கை இப்படி இழுத்து வருவதை கண்டு, நீதிபதிகள், இவ்வாறு கேள்விகளை எழுப்பினர். நீதிமன்றம் ஜூலை 16ம்தேதி தம்முன் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஆணையிட்டது[9].
© வேதபிரகாஷ்
15-07-2018
[1]https://www.facebook.com/HebronCastleChurch/videos/pcb.1358924214161918/1358918130829193/?type=3&theater
[2] The Hindu, Stop violence against churches: forum, SPECIAL CORRESPONDENT CHENNAI , DECEMBER 23, 2017 23:44 IST, UPDATED: DECEMBER 23, 2017 23:44 IST
[3] The United Christian Forum and various Christian organisations called for action to put an end to violence against churches and Christians in Tamil Nadu.Representatives of Christian organisations, including the Synod of Pentecostal Churches, told a press meet here on Saturday that the State government and the Centre must take steps to stop the communal violence that had instilled fear among Christians. Citing the recent attacks in Coimbatore, John Dayal, spokesman, United Christian Forum for Human Rights, said there were about 250 attacks against Christians throughout the country. This year, nearly 30 incidents of vandalism of churches and attacks on Christians occurred in Tamil Nadu. Synod’s general secretary K.B. Edison said the recent incidents had triggered a sense of fear among Christians ahead of Christmas celebrations. The State must take action to bring an end to the hate campaign against minorities being done by Hindu fringe outfits.The forum had launched a helpline 18002084545 to aid victims of violence and intimidation by any criminal or political group.
[4] The Hindu, HC summons Corporation, CMDA officials, by Mohamed Imranullah S. CHENNAI, JULY 13, 2018 01:38 IST; UPDATED: JULY 13, 2018 01:38 IST.
[5] The Madras High Court slammed the Chennai Metropolitan Development Authority (CMDA) for its lackadaisical approach in tackling with encroachments. The Court has asked why the CMDA shouldn’t be dissolved for its inaction[5]. The bench consisting of Justices N Kirubakaran and Krishnan Ramasamy was hearing a petition on a church, which was built by encroaching the building belonging to the corporation in Nungambakkam, Chennai. “Is the CMDA silent after accepting money from the violators? Why can’t the CMDA which does not take actions against the violators be dissolved?” the bench asked[5]. Pointing to the increasing number of encroachments in Chennai, the bench expressed its disappointment at the CMDA.
Prime Times.IN, Madras HC slams CMDA, says it hasn’t learnt lessons from 2015 Chennai floods, JULY 13, 2018.
[6] https://www.primetimes.in/news/249894/madras-hc-slams-cmda-says-it-hasnt-learnt-lessons-from-2015-chennai-floods/</p>
[7] பத்திரிக்கை.காம், சென்னையில் விதிமீறும் கட்டடங்களை இடிக்காத சிஎம்டிஏ தேவையா?….உயர்நீதிமன்றம், Posted on July 12, 2018 at 9:06 pm by vathimathi.
[8] https://patrikai.com/chennai-high-court-ask-why-did-the-cmda-should-not-abolish-for-their-inability-to-take-action-against-illegal-buildings/
[9] It then directed the Member Secretary of CMDA and the Commissioner of Corporation of Chennai to appear before it on July 16 and provide an explanation to the issues raised.http://www.newindianexpress.com/cities/chennai/2018/jul/12/why-not-close-down-cmda-if-it-cannot-stop-illegal-constructions-asks-madras-high-court-1842424.html