பொள்ளாச்சி டி.இ.எல்.சி. கற்பழிப்பு: சட்டத்திற்குப் புறம்பான சிறார் இல்லங்கள், பாதுகாப்பு இல்லாத விடுதிகள், ஏற்கெனவே அத்தகைய சீரழிவுகளுக்கு துணைபோகின்றன.

பொள்ளாச்சி டி.இ.எல்.சி.  கற்பழிப்பு: சட்டத்திற்குப் புறம்பான சிறார் இல்லங்கள், பாதுகாப்பு இல்லாத விடுதிகள், ஏற்கெனவே அத்தகைய சீரழிவுகளுக் குதுணைபோகின்றன.

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்

சட்டத்திற்குப் புறம்பாக அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வந்த டிஇஎல்சி தேவாலய மாணவர் விடுதி:  பொள்ளாச்சியில் பஸ்நிலையம் அருகிலுள்ள டிஇஎல்சி தேவாலய மாணவர் விடுதியில் இருந்து இரண்டு சிறுமிகளைக் கடத்திச் சென்ற மர்மநபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி வீசிச்சென்றனர்.  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்,  பொள்ளாச்சி பழைய பஸ்நிலையம் அருகில் டிஇஎல்சி தேவாலயம் செயல்படுகிறது.  இந்ததேவாலயம் சார்பாக அதே வளாகத்தில் மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகிறது.  இந்த விடுதியில் 17 மாணவர்களும் 3 மாணவிகளும் தங்கியிருந்தனர். கிருத்துவ அனாதை இல்லங்கள், சிறார் இல்லங்கள்,  முதலியன பிடோபைல் போன்றவர்களுக்கு உதவி வருகின்றன என்று தமிழகத்தில் தெரிந்த விசயம்தான்[1].  மாகாபலிபுரம் செக்ஸ் வழக்குகள் (வில்ஹியூம் உட்பட) அதை நன்றாகவே மெய்ப்பித்து விட்டன.  டி.இ.எல்.சியே பல வழக்குகளில் சிக்கியுள்ளது[2]. அதில் இதே போன்ற கற்பழிப்பு வழக்கும் உள்ளது[3]. விருதுநகர் மாவட்டம்,  சாத்தூர் செல்லியாரம்மன் கோவில் தெருவில் உள்ள, டி.இ.எல்.சி.,  குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வந்த மாணவி ஒருவரை, வார்டனின் கணவர் கற்பழித்தார் என்று 07-04-2012 அன்றுவந்த செய்தியைஅடுத்து, விடுதியை பொதுமக்கள் முற்றுகையிட்டு,  ஆர்ப்பாட்டம் செய்தனர்[4].  அவ்வழக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை[5]. கிருத்துவர்கள் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்று இருந்தால் நீதி கிடைக்காது. பிறகு,  எப்படி மெத்தனமாக அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள் என்று தெரியவிலை.

house-பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு

house-பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு

டிஇஎல்சி தேவாலய மாணவர் விடுதியிலிருந்து இரு பெண்கள் கடத்தல்,  கற்பழிப்பு:  இந்த மாணவர் விடுதிக்கு புதன்கிழமை (ஜூன் 11)  இரவு வந்த இரு மர்ம நபர்கள் கதவைத் தட்டி தண்ணீர் கேட்டுள்ளனர்.  கதவைத் திறந்து தண்ணீர் கொடுத்த சிறுமிகளை அந்த மர்ம நபர்கள் தூக்கிச் செல்ல முயன்றனர். அப்போது,  உடன் இருந்த மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர். அந்த மர்ம நபர்கள் கத்தி,  பிளேடு போன்ற ஆயுதங்களைக் காட்டி உடனிருந்த சிறுவர்களை மிரட்டியதுடன், மணிகண்டன் என்ற சிறுவனையும் தாக்கியுள்ளனர்.  பயந்து போன சிறுமிகளை அந்த மர்ம நபர்கள் தூக்கிச் சென்றனர். கடத்தப் பட்ட இரு சிறுமிகளும் முறையே 10, 11 வயதுடையவர்கள்.  இருவரும் அருகிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பும் ஆறாம் வகுப்பும் படித்து வருகின்றனர். சிறுமிகளைக் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்,  அருகிலுள்ள சர்வோதயா வணிக வளாகத்தின் மொட்டைமாடிக்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் ரத்தப்போக்கு அதிகமாகி மயங்கிய சிறுமிகளை அங்கேயே வீசிவிட்டுச் சென்றனர்[6].

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014

பொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014

விடுதி மாணவர்கள் அதிக நேரம் கூச்சலிட்டும் ஹாஸ்டல் வார்டன், காவலாளி  உள்ளிட்ட  யாரும்  வரவில்லை[7]:   இந்நிலையில்,  விடுதி மாணவர்கள் அதிக நேரம் கூச்சலிட்டும் ஹாஸ்டல் வார்டன்,  காவலாளி உள்ளிட்ட யாரும் வரவில்லை. இதுவும் சந்தேகத்தை எழுப்புகிறது. அதாவது இரவில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வார்டன், காவலாளி இல்லையன்றால், அவரது பங்கும் உள்ளது என்றாகிறது.  இதையடுத்து, மாணவர்கள் ஹாஸ்டல் வார்டன் சுரேஷ் குமார் வீட்டிற்குச் சென்று தகவலைத் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து, வார்டன் சுரேஷ்குமார்,  வெளியில் சென்றிருந்த காவலாளி ஏசுதாஸ் ஆகியோர் மாணவிகளைக் காணவில்லையென்று போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவிகளைத் தேடினர். அருகிலிருந்த மொட்டை மாடியில் மயக்க நிலையில் கிடந்த மாணவிகளை மீட்ட போலீஸார், பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேற்கு மண்டல காவல் துறை டிஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம்,  மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர்,  பொள்ளாச்சி எம்எல்ஏ முத்து கருப்பண்ணசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.  இவர்களுடன் வந்த பொள்ளாச்சி சார் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்ஜகடே, பாதிக்கப்பட்ட சிறுமிகளைப் பார்த்தவுடன் மருத்துவமனையிலேயே மயக்கமடைந்தார்.

பாதிக்கப் பட்ட சிறுமிகளின் நிலை, கதி: பாதிக்கப் பட்ட சிறுமிகள் பேசமறுக்கின்றனர்.   கத்தி முனையில் மிரட்டி கற்பழித்ததாகக் கூறியுள்ளனர். இனி அந்த விடுதியில் தங்கமாட்டோம் என்று உறுதியாகச் சொல்லி விட்டனராம்.  “என்னை இங்கிருந்து கூட்டிச் சென்று விடுங்கள்”, என்று ஒரு பெண் கதறினாள்.  அவளது தாயார் அப்பெண்ணை அழைத்துச் செல்ல தீர்மானித்துள்ளாள். மூன்று குழந்தைகள் இருப்பதனாலும்,  தினசரி கூலிவேலை செய்து பிழைப்பதாலும், அப்பெண்ணின் தந்தை மூன்று வருடங்களுக்கு முன்னால் அவ்விடுதியில் சேர்த்தாராம்[8].  பாதிக்கப்பட்ட இரண்டாவது பெண் ஊடகக்காரர்களிடம் பேச மறுக்கிறாளாம்.

விடுதிக்குசீல்‘, பாதிக்கப் பட்ட சிறுமிகளிக்கு ரூ.3 லட்சம் உதவி:  சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதை அடுத்து, அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த, அனுமதி பெறாமல் இயங்கிய மாணவர் விடுதி பூட்டி “சீல்’ வைக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்த 17 மாணவர்களும் ஒரு சிறுமியும் கோவையிலுள்ள “டான் பாஸ்கோ அன்பு இல்லம்” என்ற இன்னொரு கிருத்துவத் தொண்டு நிறுவனக் காப்பகத்தில் [Don Bosco Anbu Illam] சேர்க்கப்பட்டனர்[9].  இதனிடையே மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் இரு சிறுமிகளும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இந்தக் குற்றம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீஸாரும் மகளிர் காவல் நிலையத்தினரும் விசாரித்து வருகின்றனர்.  சிறுமியரைக் கடத்தி பலாத்காரம் செய்த காமக் கொடூரன்களைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பாதிக்கப் பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கவும்,  பாதுகாப்புக் கருதி அரசு இல்லத்தில் அவர்களைச் சேர்க்கவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

டி...சி கற்பழிப்புகள்: அத்தகைய அத்துமீறல்கள் ஏற்படும் என்றே எதிர்பார்க்கப் பட்டன: திஇந்து “TELC rapes: Transgressions were waiting to happen” என்றே தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. [Tamil Evangelical Lutheran Church] இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மக்கள் மற்றும் அனைத்து மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் தேவாலய அலுவலகத்தை முற்றுகையிட்டு, நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விடுதி அனுமதியின்றி நடத்தப் பட்டதாகவும் இங்கு பல மோசடிகள் நடப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்[10].  இந்த கற்பழிப்புகள் எதிர்பார்த்தது போன்றே நடந்துள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது[11].  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதைக் கண்டித்து,  பொள்ளாச்சியில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி சிலை அருகே நடைபெற்றது.  வழக்கம் போல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர்.  பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து[12] திமுகவும் தெரிவித்துள்ளது[13]. பொள்ளாச்சியில் 2 சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப் பட்ட விடுதி பூட்டி சீல் வைக்கப் பட்டுள்ளது.

 

5 பிரிவுகளில் வழக்குஆனால் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் இல்லத்தின் மீது நடவடிக்கை இல்லை: மாணவ – மாணவிகள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் இரு சிறுமிகளையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.  பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாலியல் பலாத்கார தடுப்பு சட்டம் 506(1) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப் பட்டது.  குற்றவாளிகளை பிடிக்க ஐ.ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப் பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.  இந்த விடுதியை பொள்ளாச்சி சப்-கலெக்டர் ரஷ்மி சித்தார்த்ஜெகடே ஆய்வு செய்தார்.  ‘இந்த விடுதி அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. மாணவ, மாணவிகள் தங்குவதற்கான அடிப்படைவசதிகள், பாதுகாப்பும் இல்லை.  இந்த விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப் படுகிறது.  இங்கு தங்கிப் படித்து வந்த குழந்தைகளை கோவையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கிப் படிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். 12-ம் தேதி மாலையில் அந்த தனியார் விடுதிக்கு சீல் வைக்கப் பட்டது.  மாணவர்களை கோவை குழந்தைகள் நலகாப்பகத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.  இதனையடுத்து மகளிர் மற்றும் சமூக அமைப்புகள் குற்றவாளிகளை கண்டுபிடித்து என்கவுன்ட்டரில் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

 

மனித மிருகங்கள்முஸ்கின், ரித்திக் சம்பவத்தை நினைவு கூரும் மக்கள்:  இது குறித்து நம்மிடம் பேசிய கோவை மகளிர் சங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘கோவையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்கின், ரித்திக் என்ற சிறுமியும்,  சிறுவனும் கடத்தப் பட்டு கொல்லப் பட்டனர்.  அதில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொல்லப் பட்டிருந்தார்.  அந்த மிருகச் செயலைக் கண்டித்து தமிழகமே கொந்தளித்தது.  அதில் குற்றவாளிகள் இருவரை கைது செய்து ஒருவரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இன்னொருவருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப் பட்டது.  அப்படியொரு தீர்ப்பு கொடுக்கப் பட்ட நிலையிலும், இப்படிப் பட்ட மனித மிருகங்கள் இருக்கவே செய்கின்றன.  இந்த செயலில் ஈடுபட்ட இருவரையுமே என்கவுன்ட்டரில் தண்டிக்க வேண்டும். ஆனால்,  இந்த விவகாரத்தில் போலீஸார் மிகவும் சுணக்கம் காட்டுவதாகவே தெரிகிறது.  இரண்டு சிறுமிகளில் ஒரு சிறுமியை முன்னரே பாலியல் வன்முறையில் சம்பந்தப்பட்டவன் ஈடுபடுத்தியது போலவும்,  புதிதாக வந்த ஒரு சிறுமியும் இதில் அகப்பட்டுக் கொண்டது போலவும் கொச்சைப்படுத்தி சிலர் பேசிவருகிறார்கள்.  அவர்களை பாலியல் இச்சைக்கு இணங்கவைப்பதே குற்றம்தான். அந்த நோக்கிலேயே இதை பார்க்க வேண்டும்’ என்றார்.

 

மேலிடம் காட்டம் என்று சொல்லும் போலீஸார், தாமாக தீர்மானிக்க முடியாது என்கிறார்கள்:  இது குறித்து போலீஸார் தரப்பில் பேசிய போது, ‘மேலிடத்தில் இந்த குற்றச் செயல் நிகழ்த்தியவர்கள் மீது படுகாட்டமாக இருக்கிறார்கள்.  உடனடியாக கண்டு பிடித்து சமூகத்துக்கே புத்தி புகட்டுகிற மாதிரியான நடவடிக்கையாக குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அதை சீக்கிரமே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.  அந்த வகையிலேயே 6 தனிப்பிரிவுகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி நெருங்கியும் விட்டோம் என்றனர்.  இது குறித்து என்கவுன்ட்டர் மற்றும் தூக்குதண்டனைக்கு எதிரானவர்கள் கூறும் போது,  ‘மனிதன் செய்யும் குற்றச்செயலுக்கு தீர்ப்பு சொல்ல சட்டம் இருக்கிறது. அதில் கடுமையான தண்டனைகளை வரவேற்கிறோம்.  அதே சமயம் மனிதனைக் கொல்லும் உரிமையை மனிதனே எடுத்துக் கொள்வதை எதிர்க்கிறோம்.  அந்த அளவிலேயே தூக்குத் தண்டனையையும் எதிர்க்கிறோம்.  இந்த சம்பவத்தைப் பொறுத்த வரை குற்றம் புரிந்தவன் மிருகத்தைவிட கீழானவன் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால், அவன் குற்றவாளி தான் என்பதை போலீஸ் மட்டும் எப்படி தீர்மானிக்க முடியும். அப்பாவிகள் பலரை போலீஸ் தண்டித்திருப்பது வரலாறு.  அந்த வகையில் அப்பாவி ஒருவன் போலீஸ் கையில் சிக்கி என்கவுன்ட்டருக்கு ஆளானால் என்ன ஆவது?  எனவே யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தி தீர விசாரித்தே தண்டனை கொடுக்க வேண்டும்.  அப்படி மீண்டும் ஒரு என்கவுன்ட்டர் நடந்தால் அது போலீஸ் கையில் உயிர் எடுக்கும் உரிமையை தொடர்ந்து கொடுப்பது போலாகி விடும்’ என்றனர்.

குற்றவாளிகளை நெருங்குகிறது போலீஸ்:  பொள்ளாச்சியில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் பட்டியலை வைத்து சிலரை பிடித்துள்ளது போலீஸ். அதில் கோபிநாத் என்பவன்,  வீராசாமி என்ற தனது நண்பனுடன் மது அருந்தியதாகவும், அவன் இந்த பள்ளி மாணவிகளிடம் பாலியல் உறவு கொள்ள அழைத்ததாகவும்,  தான் வர மறுத்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறான்[14]. வீராசாமியை விசாரித்த போது,  தான் அங்கே செல்லவில்லை எனவும், அங்கே சென்றவர்கள் என்று அருண், அருண்வெங்கடேஷ், ஹரி என 3 பேரை சொல்லியிருக்கிறான். அவர்களை விசாரித்த போது மேலும் பலர் பிடிபட்டுள்ளனர்.  அவர்களின் புகைப் படங்களை மாணவிகளிடம் காட்டிய போது, விடுதியில் சேர்ந்த புதிய மாணவியால் அடையாளம் சொல்ல முடியவில்லை.  ஆனால் பழைய மாணவி, பார்த்த பலரையும் ‘அவன்தான், அவன்தான்’ என்றே காட்டினாராம்.  இதில் குழம்பிப் போன போலீஸ், தீவிர விசாரணை மேற்கொண்டு கோபிநாத், அருண், அருண்வெங்கடேஷ், ஹரி ஆகியோரை அரசு மருத்துவ மனையில் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது. வன்முறைக்கு ஆளான சிறுமிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் இந்த 4 பேரின் மாதிரி ஒத்துப் போகிறா என்பதை பார்த்த பின்பே உண்மையான குற்றவாளிகளை அடையாளம் சொல்ல முடியும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்[15]. சந்தேகப் பட்ட ஆசாமியைப் பிடித்து வைத்துள்ளனர் என்றும் செய்திவந்துள்ளது[16].

© வேதபிரகாஷ்

14-06-2014

[1]https://christianityindia.wordpress.com/2012/08/04/another-pedophile-in-icmc-salem/

[2]https://christianityindia.wordpress.com/2010/09/25/lutheran-bishop-caught-in-land-scam/

[3] https://christianityindia.wordpress.com/2012/04/07/what-is-wrong-with-telc-crime-sex-money-power/

[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=443283

[5]  தினமலர், மாணவியிடம்சில்மிஷம்சாத்தூரில்டி..எல்.சி., விடுதிமுற்றுகை, பதிவுசெய்தநாள் : ஏப்ரல் 07,2012, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=443283

விடுதியில்தங்கிபடித்துவரும், 10ம்வகுப்புமாணவிசுமதி,14 (பெயர்மாற்றப்பட்டுள்ளது). தேவநேசனால்கற்பழிக்கப்பட்டு, கருதரித்துஇருப்பதாகவும், இதைமறைக்கசுமதியை, தனியார்மருத்துவமனைக்குஅழைத்துச்சென்றுஊசிபோட்டதாகவும், தகவல்பரவியது. இதைதொடர்ந்து, நேற்றுஇரவு 7 மணிக்கு, விடுதியைமுற்றுகையிட்டஅப்பகுதிமக்கள், பெண்வார்டன், அவரின்கணவர், இருவரையும்கைதுசெய்யக்கோரி, ஒருமணிநேரத்திற்கும்மேலாகஆர்ப்பாட்டம்செய்தனர்.
சாத்தூர்டி.எஸ்.பி., சின்னையாபேச்சுவார்த்தைநடத்தினார். பெண்போலீசார்மாணவியிடம்விசாரணைநடத்தினர். ஹாஸ்டல்வார்டன்நிர்மலா, அவரின்கணவர்தேவநேசன், இருவரையும்போலீசார்ஸ்டேஷனுக்குஅழைத்துச்சென்றுவிசாரித்தனர். அப்பகுதியில், போலீஸ்பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

[6]தினமணி, இருசிறுமிகளைக்கடத்திபாலியல்பலாத்காரம்: பொள்ளாச்சியில்குற்றவாளிகளுக்குவலைவீச்சு, By dn, பொள்ளாச்சிFirst Published : 13 June 2014 02:34 AM IST

[7]http://www.dinamani.com/tamilnadu/2014/06/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/article2277761.ece

[8] She is one of the two girls, who were staying at the Tamil Evangelical Lutheran Church-run home and were allegedly raped at knife point. “The girl did not say anything more; she had been repeatedly telling me to take her home,” the woman said. She is a daily wage earner. Her husband and she had enrolled the girl to the hostel three years ago as the family could not afford her education, who is the eldest of their three children. Though the woman said she did not know how she would be able to educate the girl, she was nevertheless determined to take her. The family of the second girl, aged around 10, refused to meet the press.

http://www.thehindu.com/news/cities/Coimbatore/traumatised-rape-victims-battle-it-out-in-hospital/article6112456.ece

[9] Following the closure of the home at Pollachi on Thursday after the alleged rape the remaining 17 children of the home, all aged between six and 13, have been shifted to Don Bosco Anbu Illam, Coimbatore.

http://www.thehindu.com/news/cities/Coimbatore/traumatised-rape-victims-battle-it-out-in-hospital/article6112456.ece

[10]http://www.thehindu.com/news/national/tamil-nadu/people-seething-with-anger-at-lack-of-basic-norms-in-the-home/article6114179.ece?ref=relatedNews

[11]http://www.thehindu.com/news/national/tamil-nadu/telc-rapes-transgressions-were-waiting-to-happen/article6114065.ece?ref=relatedNews

[12]http://www.maalaimalar.com/2014/06/14053258/To-put-an-end-to-sexual-offens.html

[13]http://www.dinamani.com/tamilnadu/2014/06/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81/article2279735.ece

[14]http://www.dnaindia.com/india/report-police-hunt-for-accused-in-the-pollachi-minor-girls-rape-case-1995365

[15]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/article6114052.ece?homepage=true

[16]http://www.dnaindia.com/india/report-key-suspect-in-rape-of-pollachi-minor-girls-detained-1995426

குறிச்சொற்கள்: , , , , , , , , ,

7 பதில்கள் to “பொள்ளாச்சி டி.இ.எல்.சி. கற்பழிப்பு: சட்டத்திற்குப் புறம்பான சிறார் இல்லங்கள், பாதுகாப்பு இல்லாத விடுதிகள், ஏற்கெனவே அத்தகைய சீரழிவுகளுக்கு துணைபோகின்றன.”

  1. saranyasarah Says:

    Don’t judge others. May be you are blind.. so you forgot about nithiyandha.. Even nithiyanandha the Hindu, He is also wrong.. There are many false gurus and many wrong things done by Hindus. why dont you post that here???

  2. saranyasarah Says:

    I never support the wrong things… But Don’t think only Christians are wrong.. In Christianity also, many of them are not truly following Jesus, that is problem. Not every Christian are Truly Jesus follower. Many of them are following Mary and Saints.. Till they did not find the truth. Again im saying not everyone is good,even you and me.. There are many wrong things in every religion… Instead of criticizing others, Find the Truth.. God is same for all. God did not create religions… True God is awesome.. God bless You..

  3. TELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு) ஆகி, கட்டிட தொழிலாளிய Says:

    […] https://christianityindia.wordpress.com/2014/06/15/another-gang-rape-in-telc-orphanage-child-home-in… […]

  4. Joel johnson Says:

    இந்து சாமியார்கள் மட்டும் யோக்கியமா என்ன?முக்கால்வாசி இது போன்று தவறுகள் செய்வது அந்த நாய்கள்தான் அத விட்டுடுவான்க கிறிஸ்த்தவர்கள் மேல எதுல குற்றம் சொல்லாம் என குறியா இருப்பான்க மானங்கெட்டவனுங்க

Joel johnson -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.