அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (1)?

அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (1)?

Hasthampatti church

தொடர்ந்து ஒரு குறிப்பிட்டப் பகுதியிலேயே, கிருத்துவர்கள் அதிகமாக குற்றங்களில் ஈடுபடுவது என்பது வாடிக்கையாகி விட்டது. அதிலும் செய்த குற்றங்களையே திரும்ப-திரும்ப செய்வது என்ற போக்கும் காணப்படுகிறது. இதனால், சட்டம், நீதி, நியாயம் முதலியவற்றிற்கு இவர்கள் சிறிதும் பயப்படுவதில்லை என்று தெரிகிறது. மேலும் அத்தகைய சட்ட மீறல்களுக்கு யார் ஊக்கம், ஆதரவு மற்றும் செய்விக்கும் கட்டளைகளைக் கொடுக்கிறார்கள் என்றும் தெரியவில்லை[1]. இவ்விசயத்தில் “அஸ்தம்பட்டி” அடிக்கடி செய்திகளில், வழக்குகளில், சட்டமீறல்களில் வருவது நோக்கத்தக்கது. “அஸ்தினாபுரம்” எப்படி ஒரு பெரிய போருக்கு வழிவகுத்ததோ, அதுபோல “அஸ்தம்பட்டி” பல கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்களிடையே உள்ள சண்டைகளுக்குக் காரணமாக உள்ளது. ஏனெனில் இங்கு பல கிருத்துவக் குழுக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலை செய்து வருகின்றன என்றும் தெரிகிறது[2]. மாணிக்கம் துரை மற்றும் அஸ்தம்பட்டு சிஎஸ்ஐ-காரர்களுக்கு இடையே நடந்துள்ள / நடக்கும் வழக்குகளே அவர்களின் நில அகபரிப்பு, மோசடி முதலியவற்றை எடுத்துக் காட்டுகின்றன[3]. அஸ்தம்பட்டியிலிருந்து 18 வயதிற்கு கீழுள்ள இளம் பெண்கள் / சிறுமிகள் காணவில்லை என்று தேசிய குற்ற ஆவணம் கூறுகிறது[4]. ஜனவரி 2013ல் கூட சேலத்தில் ஒரு ஆசிரியரின் இத்தகைய திருவிளையாடல்கள் வெளிவந்தன[5].ஆகவே, இங்கு என்ன நடக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும்.

அஸ்தம்பட்டி சர்ச்சில் ஒரு மதபோதகர் உரையாற்றுகிறார்

அஸ்தம்பட்டி சர்ச்சில் ஒரு மதபோதகர் உரையாற்றுகிறார்

இன்னொரு கிருத்துவ மதபோதகர் மீதுபுகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம் (அக்டோபர் 2013): சமீபத்தில் இப்படியொரு தலைப்பில் ஒரு பதிவு செய்தேன்[6]. ஆனால், இதில் பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன. கார் செட்டுக்குத் தூகிச் சென்று சில்மிஷம் செய்தானா அல்லது கற்பழித்தானா என்பது தெரியவில்லை. ஊடகங்கள் கொஞம்-கொஞமாக அல்லது ஒரு நாளிதழ் போட்டதை அப்படியேதான்ம போட்டனவேயன்றி, நேரிலே சென்று பேசி கண்டு, விசாரித்து ஒன்றும் பிரமாதமாக செய்துஇவிட வில்லை. தில்லி, மும்பை போன்று எந்த பெண்ணிய வீராங்கனைகளும் எதிர்க்கவில்லை, போராட்டங்கள் நடத்தவில்லை. ஆங்கில செனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புலன்விசாரணை செய்து விடவில்லை. செய்திகளை உடக்கவில்லை, உங்கள் செனல் என்று வீரம் பேசவில்லை.

Manikandan-Rekha-complained about Christian teacher

கிருத்துவமத போதகர் மீதுபுகார் – 13 வயது மாணவியிடம் ஜெயசீலன் சில்மிஷம்  (அக்டோபர் 2013): பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. சேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ. ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 18-10-2013 காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் கார்-செட்டுக்கு அழைத்து சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது[7]. பின்னர் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார். பிறகு பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், வெள்ளிக்கிழமை மாலையிலேயே மதபோதகர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்[8]. வழக்கம் போல மாவட்ட சிறார் பாதுகாப்பு அதிகாரி தேவகி வந்து விசாரித்துச் சென்றார்[9]. அஸ்தம்பட்டி போலீஸார் பாலியல் குற்றங்களினின்று சிறார்களை காக்கும் சட்டம் 2012, பிரிவுகள் 8 மற்றும் 9 களின் கீழ் [Section 8 and 10 of the Protection of Children from Sexual Offences Act, 2012] வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[10]. இது ஏதோ சாதாரண விசயமாக எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில், தமிழகத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய பாலியல் வன்முறைகள், வன்புணர்ச்சிகள், கற்பழிப்புகளில் ஏகப்பட்ட கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று தொடர்ந்து சிக்கி வருகிறார்கள்[11]. வழக்கம் போல புகார்கள் கொடுக்கப் படுகின்றன. சில விசயங்களில் கைது செய்யப் படுகிறார்கள். ஆனால், அதற்கு பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை. தில்லி-மும்பை போன்று, இங்கு யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், என்னுடை தொகுப்பில் உள்ள கட்டுரைகள், நியூஸ் கட்டிங்கள் பார்க்கும் போது “அஸ்தம்பட்டி” அடிக்கடி தோன்றி கண்களைச் சிமிட்டுகின்றன. இதனால், உள்ளவற்றைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.

© வேதபிரகாஷ்

21-10-2013


[1] விவரங்களுக்கு www.christianityindia.wordpress.com என்ற தளத்தில் என்னால் பதிவு செய்யப் பட்டுள்ள பல கட்டுரைகளைப் பார்க்கவும்.

[2] Schoen staff Sisters of Mary, 35/2A, Johnsonpet, Palanioppo Nagar, Hasthampatty, Salem – 636 007.

[3] Church Of South India Trust … vs The District Revenue Officer on 30 March, 2010 DATED: 30.03.2010; http://indiankanoon.org/doc/1228297/

[5] Invoking for the first time the stringent provisions of the Protection of Children from Sexual Offences Act, 2012, which came into force on November 14 last, the Salem City Police on Thursday arrested a 51-year old school teacher of the Salem Government School for Blind on various charges of sexual abuse and harassment of visually challenged girls, all aged between 6 and 8 studying in the school, here.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/more-sexual-abuse-cases-teacher-mason-held/article4271402.ece

[9] A Class VIII student was sexually assaulted by a church priest at a school in Hasthampatti here on Friday. The incident came to light after the girl complained to her mother after returning home in the evening. The mother lodged a complaint with the Hasthampatti police late Friday night. On Saturday, District Child Protection Officer Devaki conducted an inquiry. Ms. Devaki said the priest, Jeyaselan (64), was residing on the school premises. He took the girl to a car shed on the premises and allegedly assaulted her. Though the girl informed her teachers of the incident, no action was taken. Police registered a case under Section 8 and 10 of the Protection of Children from Sexual Offences Act, 2012.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/girl-sexually-assaulted-by-priest/article5253113.ece

குறிச்சொற்கள்: , , , , , , , ,

4 பதில்கள் to “அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப்பதேன், செக்ஸ் குற்றங்களில் சிக்குவதேன் (1)?”

  1. அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப் Says:

    […] கிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்! « அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போ… […]

  2. அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப் Says:

    […] கிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்! « அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போ… […]

  3. அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப் Says:

    […] [1] https://christianityindia.wordpress.com/2013/10/22/why-hasthampatti-christian-priests-involved-in-sex… […]

  4. அஸ்தம்பட்டி கிருத்துவ பாஸ்டர்கள், போதகர்கள் பற்பல மோசடிகளில் மாட்டிக் கொள்வதேன், சூடாக இருப் Says:

    […] [1] https://christianityindia.wordpress.com/2013/10/22/why-hasthampatti-christian-priests-involved-in-sex… […]

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.