மகன்– மகள்கள் கிறிஸ்தவர்கள் ஆகியதால், மனம் நொந்து விரக்தி அடைந்த தந்தை ரூ. 2 கோடி மதிப்புள்ள வீட்டை கோவிலுக்கு தானமாக அளித்தது!
குமரகோட்டம்பகுதியில்வசித்துவரும் 85 வயதானமுருகபக்தர்வேலாயுதம்: மு.வேலாயுதம் காஞ்சிபுரம் குமரகோட்டம் பகுதியில் முனுசாமி முதலியார் அவின்யூவில் வசித்து வரும் முருகன் பக்தர் ஆவார். முருகன் குலதெய்வமும் ஆகும். கோவிலுக்கு அருகில் இருப்பதாலும், முருக பக்தர் என்பதாலும், சமயத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தமது மகன் மகள்களையும் படிக்க வைத்தார். அவர்களும் படித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். ஆனால், இரண்டு மகள்கள் மற்றும் மகன் கிருத்துவர்களைக் காதலித்து, மதம் மாறி திருமணம் செய்து கொண்டனர். முன்னர் பெற்றோருக்கும், இவர்களுக்கும் வாதங்கள் ஏற்பட்டன, ஆனால் இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஒப்புக் கொள்ளவில்லை. இரக்கமும் படவில்லை, வயதான பெற்றோர் பற்றியும் கவலைப்படவில்லை. இதனால், மனம் நொந்து, விரக்தியில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர். 85 வயதான அவரை பிள்ளைகள் பாதுகாக்க வேண்டியநிலையில், இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துவர்களாக மாறிய பின் நான் இறந்தாலும், எனக்கு அவர்கள் இறுதி சடங்கு செய்ய மாட்டார்கள்: முனுசாமி முதலியார் அவின்யூவில் 2,860 சதுர அடி பரப்பளவு கொண்ட 2 அடுக்கு மாடிக் குடியிருப்புக்குரிய சுய சம்பாத்திய கட்டிடம் உள்ளது. இது குறித்து வேலாயுதம் கூறியதாவது[1]: “நான் சம்பாதித்து வீட்டை கட்டினேன். ஹிந்து மதத்தை சேர்ந்த எனக்கு, கடைசி காலத்தில் பிள்ளைகள் இறுதி சடங்கு செய்வர் என இருந்தேன். இரு மகள்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும், அரசு பணியில் உள்ளனர். ஒரு மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும் கிறிஸ்துவ மதத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மூன்று பிள்ளைகளும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டனர். எனவே, எனக்கு ஹிந்து முறைப்படி அவர்கள் இறுதி சடங்குகள் செய்யப்போவது இல்லை. எனக்கு சொந்தமான 2,680 ச. அடி பரப்பளவு வீடு, தற்போது 2 கோடி ரூபாய் மதிப்புடையது. இந்த வீட்டை மதம் மாறியஎன் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பவில்லை. ஆகையால், என் குலதெய்வமான காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு தானமாக எழுதி வைத்து விட்டேன். கிறிஸ்துவர்களாக மாறிய பின் நான் இறந்தாலும், எனக்கு அவர்கள் இறுதி சடங்கு செய்ய மாட்டார்கள்[2]. இதனால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு என் சொத்தை கொடுக்க விருப்பம் இல்லை. தற்போது என் மூத்த மகளும், இரண்டாவது மகனும் என் வீட்டில் ஒரு பகுதியில் வசிக்கின்றனர்”.
கிறிஸ்துவமதத்திற்குமாறியவர்களுக்குஎன்சொத்தைகொடுக்கவிருப்பம்இல்லை.: முன்னர் பத்திரங்களை முறையாக பதிவும் செய்தார்[3]. பிள்ளைகள் மதம் மாறியதால் சொத்தை முருகனுக்கு காணிக்கையாக்கினேன் என்று தெரிவித்தார்[4]. அவர் கூறியதாவது: “எனக்கு 3 பிள்ளைகள்உள்ளனர். 3 பேரும்அரசுப்பணியில்நன்றாகவேஉள்ளனர். 3 பேருக்கும்திருமணமும்ஆகிவிட்டது. ஆனால் 3 பிள்ளைகளும்மதம்மாறியதால்வருத்தமடைந்துஎனதுகுலதெய்வமானகாஞ்சிபுரம்குமரகோட்டம்சுப்பிரமணியசுவாமிக்குதானமாகபத்திரப்பதிவுசெய்துவழங்கியுள்ளேன். இச்சொத்தின்மதிப்புரூ.2 கோடியாகும். நானும்என்மனைவியும்தற்போதுஅந்தசொத்தில்ஒருபகுதியில்குடியிருந்துவருகிறோம். மீதப்பகுதியைஅதாவது 2 அடுக்குமாடிகுடியிருப்புக்கட்டடத்தைகாணிக்கையாககொடுத்துள்ளோம். 3 பிள்ளைகளும்என்சொல்பேச்சுகேட்கவேஇல்லை[5]. பிள்ளைகள்பெற்றோர்களைமதிக்கவேண்டும். இந்தச்சொத்துநான்காஞ்சிபுரம்நகராட்சியில்சுகாதாரஆய்வாளராகபணியாற்றியபோதுசுயமாகசம்பாதித்தசொத்தாகும்[6]. இந்தச்சொத்தினைதானமாகசெய்யும்முழுஉரிமையும்எனக்குஉள்ளது. கந்தபுராணம்அரங்கேற்றம்செய்யப்பட்டஇத்திருக்கோயிலில்உள்ளமண்டபத்தில்எனதுசொத்தைமுருகனுக்குகாணிக்கையாககொடுத்ததுமகிழ்ச்சியாகஇருக்கிறது,” எனவும் மு.வேலாயுதம் தெரிவித்தார்.
இந்துஅறநிலையத்துறைஇதற்குவிழாஎடுத்தது: மேலும், அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார்[7]. அப்போது, வேலாயுதத்திற்கு சால்வையும் மாலையும் அணிவித்து கவுரவித்தத அமைச்சர் சேகர்பாபு நன்றி தெரிவித்தார்[8]. “கந்தபுராணம்அரங்கேற்றம்செய்யப்பட்டஇத்திருக்கோயிலில்உள்ளமண்டபத்தில்எனதுசொத்தைமுருகனுக்குகாணிக்கையாககொடுத்ததுமகிழ்ச்சியாகஇருக்கிறது,” என சொல்லியிருக்கும் போது, எந்த அளுக்கு கஷ்டப் பட்டிருப்பார் என்று கவனிக்கலாம். இந்நிகழ்விற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம், எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்[9]. காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பொன். ஜெயராமன் வரவேற்று பேசினார்[10]. 2 கோடி மதிப்பிலான சொத்தை தானமாக வழங்கிய மு.வேலாயுதத்துக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு சால்வையும், மாலையும் அணிவித்து கௌரிவித்ததுடன் நன்றியும் தெரிவித்தார். நிறைவாக குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலர் பரந்தாமக்கண்ணன் நன்றி கூறினார்.
நடிகர்–பாடகர்ராகவேந்திரன்மகள்கள்விவகாரமும்இவ்வாறேஇருந்தது: சென்ற ஏப்ரல் 2021ல், நடிகர்-பாடகர் ராகவேந்திரன் மகள்கள் விசயங்களிலும், இத்தகைய விவகாரம் வெளிப்பட்டது[11]. அவர் இறந்த போது கிருத்துவராக மாறிய மகள் தனது மதபோத-நண்பனுடன் வந்து ஆட்டிப் படைக்க முயன்றதை வீடியோக்கள் அப்பட்டமாக எடுத்துக் காட்டின. அந்த ஹென்றி பைபிளோடு தயராக நிறு கொண்டிருந்தான். “இந்துவாக” இருக்கும் இன்னொரு மகளைக் காணவில்லை. யார் கொள்ளி வைத்தார்கள் என்று தெரியவில்லை. பிரசன்னா, கல்பனா என்று இரு மகள்கள் பிரசன்னா கிருத்துவ மதம் மாறி ஷகினா ஷான் ஆனார். இவரது கணவர், தன் மனைவியின் சகோதரி மகளை பாலியல் வன்மத்தில் ஈடுபடுத்தியதால், புகார் கொடுத்து, கைது நடவடிக்கையும் நடந்தது. ஆனால், பாட்டி சுலோசனா கதையை சொத்து விவகாரம் என்று மாற்றினார்.
சொத்துப்பிரச்சினைஎன்றுதிடீரென்றுதிசைத்திருப்பும்போக்கு: விசாரணையில், சிறுமியின் சித்தப்பா, உறவினர், மத போதகர் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுப்பதை சிறுமியின் சித்தி அறிந்தும், அதனை தடுக்கவில்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நான்கு பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்[12]. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுமியின் பாட்டி, சொத்து தகராறு காரணமாக மூத்த மகளான பின்னணி பாடகி, தனது இரண்டாவது மகளின் குடும்பத்தாரை பழிவாங்கி விட்டதாக குற்றம்சாட்டினார்[13]. சொத்து தகராறு காரணமாக பாடகி பொய் புகார் அளித்துள்ளதாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். அப்படியென்றால், இதனை புகார் கொடுத்த அன்றே சொல்லியிருக்கலாம். ஒரு தாய் இவ்வாறு ஒரு மகளுக்கு ஒரு மாதிரி, இன்னொரு மகளுக்கு இன்னொரு மாதிரி பேசுவதும் திகைப்பாக இருக்கிறது. இங்கு பாட்டி என்றால், சுலோசனா என்றாகக் கொண்டால், அதே பாட்டி, பேத்தியின் நிலையினையும் கவனிக்க வேண்டுமே? பேத்தி அந்த அளவுக்கு பொய்யா சொல்வாள்? ஆனால், இந்த காஞ்சிபுரம் தாத்தா உறுதியாக, தெளிவாக இருக்கிறார்!
போப் ஏன் பதவி விலகினார் – வாடிகனில் நடக்கும் விவகாரங்கள் என்ன – அவற்றை வாடிகன் ஏன் மறைக்கின்றது?
sexy-pope-john-paul-2
600 ஆண்டுகளில் முதன் முறையாக போப் தானாக பதவி விலகுகிறார்: இது ஏதோ பெரிய விஷயம் போல இந்திய ஊடகளில் செய்திகள் இப்படி வெளிவர ஆரம்பித்துள்ளன. வாடினனைப் பற்றி, போப்பைப் பற்றி, கார்டினல்களைப் பற்றி, வாடிகன் அரசாங்கத்தைப் பற்றி ஒன்றும் அறியாத இந்தியர்கள் – ஊடக ரசிகர்களாக ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் போப் “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்களால் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளன[1]. அத்தகைய “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்கள் என்னவென்றும் விளக்கியுள்ளன, அதாவது 2005ல் அவர் பதவிக்கு வந்ததிலிருந்து, செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்கள், பிஷப்புகள், மதகுருமார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மறைத்து விட்டார் என்று குற்றாஞ்சாட்டப்பட்டுள்ளார்[2]. 200க்கும் மேற்பட்ட செவிட்டு சிறுவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்திய ஒரு அமெரிக்க பாதிரியை பாதுகாத்ததாக கார்டினெல் ரெட்சிங்கர் அல்லது போப் பெனிடிக்ட் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்[3]. ஆனால், நம்மவர்கள் கண்டுகொள்ளவில்லை அல்லது அமுக்கிவிட்டார்கள். முழு விவரங்கள்-வீடியோ முதலியவற்றை இங்கே காணவும்[4].
ஆட்டத்தை.ரசிக்கும்.போப்
இந்திய ஊடகங்களின் ஜனரஞ்சகமான செய்திகள்: போப் பதவி விலகுகிறார், விலகி விட்டார், இன்னொரு போப் தேர்ந்தெடுக்கப்படுவார், தேர்தெடுக்கப்படுகிறார் என்றுதான் இந்திய ஊடகங்களில் செய்திகள் ஜனரஞ்சகமாக, விசேசமாக, விசேசிக்கப்பட்டதாக, நம்பிக்கையாளர்களுக்கு அள்ளித்தரும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. மக்களும், குறிப்பாக படித்த மேல்தட்டுக்காரர்களும் ஜாலியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னணி என்ன, கடந்த ஒரு-இருவாரங்களில் என்ன நடந்தது என்பதனை எந்த துப்பறியும் செய்தியாளரும், நாணயமான நிருபரும் கன்னியமான ஆசிரியரும் எடுத்துக் காட்டவில்லை. நித்யானந்தாவை துருவி-துருவி கேள்வி கேட்ட நிருபர்கள், வீடியோ எடுத்த வித்தகர்கள், தருமபுர ஆதினத்தையும் தூஷித்தவர்கள் ஏன் இப்படி கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமையாக, மனம் இருந்தும் சிந்தனையற்றவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று கர்த்தருக்குத்தான் தெரியும் போலிருக்கிறது!
பாலியல் வன்முறை – செக்ஸ் விவகாரங்களில் நாறிப்போன வாடிகன்: ஆனால், உண்மையில் கத்தோலிக்கச் சர்ச் செக்ஸ் விஷயத்தில் நிரம்பவும் ஆடிபோயுள்ளது. உலகமுழுவதும், குறிப்பாக கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள், மடலாயக் காப்பாளர்கள் என்று பொறுப்புள்ளவர்களே பற்பல கன்னியாஸ்தீரிக்களை, பெண்களை, சிறுவர்-சிறுமியர்களை பாலியன் வன்புணர்ச்சி, கற்பழிப்பு, பலமுறை புணர்தல், பலர் புணர்தல் என்று ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு பாவமூட்டைகளின் பாரம் தாங்காமல் கர்த்தரே காப்பாற்ற முடியாத நிலையில் போய் விட்டது. இதனால் அத்தகைய பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக, ஒரு கூட்டத்தார் வியாழக்கிழமை (28-02-2013), போப்பிடம், “தாங்கள் விலகுவதற்கு முன்னர், அத்தகைய பிஷப்புகளை பாதிரிகளை மற்றும் அவர்களை பாதுகாத்து வரும் அதிகாரிகளை களையடுக்குமாறு” முறையிட்டுள்ளனர்[5].
போப்பை தேர்ந்தெடுக்க வேண்டியவரே செக்ஸ் விவகாரத்தால் பதவி விலகியது: சர்ச்சுகளின் செக்ஸ் விவகாரம் எந்த அளவிற்கு போய் விட்டதென்றால், கார்டினல் கேய்த் ஓபிரியன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர், தன்னுடைய்ச் செக்ஸ் காமக்களியாட்டங்களினால் எடின்பர்க்கின் ஆர்ச்பிஷப் பதவிலிருந்து 25-02-2013 அன்று விலக நேர்ந்து, அவர் புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் தகுதியையும் இழந்தபோது, பெரிய விவகாரமாகி விட்டது[6]. இதனால், கார்டினல்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது. இது ஒரு உதாரணம் தான். இதைப் பற்றி ஏற்கெனவே செய்துள்ள பல பதிவுகளை இதே இணைதளத்தில் பார்க்கவும் – http://www.christianityindia.wordpress.com
செக்ஸ்-குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்களைப் பற்றி விசாரிக்க மூன்று கார்டினல்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது[7]: கார்டினல்கள் என்பவர்கள் கத்தோலிக்க சர்ச்சுகளில் பெரிய தலைமைப் பதவியில் இருப்பவர்கள். இவர்கள் தாம் கூடி, தமக்குள் ஒருவரை போப்பாகத் தேர்ந்தெடுப்பர். அத்தகைய தேர்ந்தெடுப்பு விவகாரம் மிகவும் ரகசியமாக இருக்கும். அத்தைகைய தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சிகள் எப்படியிருக்கும் என்று பல ஹாலிவுட் படங்கள் தத்ரூபமாகக் காட்டியுள்ளன[8]. ஆகையால், மூன்று கார்டினெல்களின் காமலீலைகள் பற்றி விஷயங்கள் வெளிவந்ததுடன், வாடிகன் வழக்கம் போல அதனை அமுக்கிவிடப் பார்த்தது. ஆனால், எப்படியோ அக்கடிதம் வெளியே கசிந்து விட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே அல்லது அதற்குத் துணை போனவர்களே விசாரிக்கும் போது என்ன நியாயம், நீதி கிடைக்கும், எதிர்பார்க்க முடியும்?
“வாடிலீக்” – வாடிகன் கசிவு என்றால் என்ன?: “வாடிகன்லீக்” – வாடிகனில் கசிவு – அதாவது பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அவற்றில் இருந்தன. அவையாவும், குருமார்களின் கடித போக்குவரத்திலிருந்தே பெறப்பட்டதாகும்[9]. குறிப்பாக காபிரியல் என்பவர் “திருட்டுக் குற்றத்திற்காக” வாடிகன் போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[10]. வாடிகனில் எல்லாமே போப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், எவ்விதத்தில் இக்குற்றங்கள் உண்மையாக விசாரிக்கப்படும், உண்மைகள் வெளிவரும், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்விகளை எழுப்பி, கடிதங்களையும் போப்பிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வழக்கம் போல ஆடிகன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் கூறியுள்ளார்கள்[11].
காப்ரியல் யார் – அவன் என்னத்தான் அப்படி குற்ரம் செய்துவிட்டான்?: காப்ரியல் ஒரு பட்லெர் (butler) அதாவது வேலைக்காரன், அவன், வாடிகன் பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அடங்கிய குருமார்களின் கடிதங்களை வெளியே புழக்கத்தில் விட்டதால், கடந்த அக்டோபர் 2012லிருந்து ஒன்றரை ஆண்டு சிறைவாசத் தண்டனைக் கொடுக்கப் பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளான்[12]. புனித பரிசுத்த ஆவியின் தூதனாக இருந்து தான் வாடிகனில் இருக்கும் தீய சக்திகள், ஊழல் முதலியன எங்கும் இருப்பதைக் கண்டு அவற்றை கசியவிட்டதால் அத்தண்டனை அளிப்பதாக, விசாரித்த நீதிபதி 20 பக்கங்களில் விளக்கமும் அளித்துள்ளார்[13].
வாடிகன் வங்கியின் ஊழலுக்கும், உலக பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?: 2011 ஆண்டில் வாடிகன் வங்கிற்கு 19 மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் ரூ.100 கோடி [$19 million (15 million euros) in 2011] நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் உலக வர்த்தக மார்கெட் சரிவுதானாம்[14]. அப்படியென்றால், வாடிகன் என்ன வியாபாரம் செய்கிறது, எப்படி பணத்தைப் பெறுகிறது? பிறகு வாடிகன் வங்கியில் ஏன் ஊழல் நடக்கிறது, கார்டினல்கள், பிஷப்புகள் கையாடல்கள் செய்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள் ஆனால் விஷயங்கள் மறைக்கப்படுகின்றன? இப்பொழுது கிருத்துவர்கள் இந்திய அரசாங்கத்தில் பிகப் பெரிய பதவிகளில் உள்ளதால் அவர்கள் இந்தியர்களாக இந்திய நலன்களுக்காக வேலை செய்வார்களா அல்லது சிவுவாசமிக்க கிருத்துவர்களாக, சோனியா மெய்னோ தலைமையில் வாடிகனுக்கு சாதகமாக வேலை செய்வார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
[1] Citing failing strength of “mind and body,” Pope Benedict XVI stunned his closest aides and more than 1 billion Catholics by resigning on Monday, becoming the first pope to do so in nearly 600 years and ending the tenure of a formidable theologian who preached a gospel of conservative faith to a fast-changing world.
[3] Yet the scope of the abuse cases emerging in Europe and new allegations this week that a Vatican office led by Benedict — then known as Cardinal Joseph Ratzinger — failed to defrock an American priest who had allegedly molested as many as 200 deaf boys have again shed a spotlight on Vatican secrecy over such sensitive issues as church finances and abuse cases.
[5] A leading support group for victims of clerical sexual abuse also made what it called a “last-ditch plea” to Pope Benedict to use his authority before resigning on Thursday to discipline bishops who have protected predatory priests in their dioceses.
[6] The abuse issue took on new urgency after Scotland’s Cardinal Keith O’Brien, accused of improper behavior with young priests, quit as Edinburgh archbishop on Monday and pulled out of the Sistine Chapel conclave to elect a new pope.
[7] The officials also commented on Benedict’s meeting that morning with three cardinals he had appointed to investigate a papal letter-leaking scandal that cast a shadow over his last year in office. The probe into the “VatiLeaks” affair has prompted months of speculation, including thinly sourced recent reports in the Italian media claiming that the trio discovered a faction of gay Vatican priests who were being blackmailed by laymen with whom they had had “worldly” relations.
[8] டான் பரௌனின் “ஏஞ்செல்ஸ் அண்ட் டெமென்ஸ்” படத்திலும் காணலாம். அதில் பங்குக் கொள்ளும் கார்டினெல்கள் எப்படி புகைப் பிடித்துக் கொண்டு, மது அருந்தி கொண்டு………………….வருகிறார்கள், இருக்கிறார்கள்………………முதலிய விவகாரங்கள் எடுத்துக் காட்டப் படுகின்றன.
[9] VatiLeaks, as the scandal came to be known, dragged the fusty institution into the wild WikiLeaks era. It exposed the church bureaucracy’s entrenched opposition to Benedict’s fledgling effort to carve out a legacy as a reformer against the backdrop of a global child sex abuse scandal and the continued dwindling of his flock.
[11] Despite Gabriele’s arrest, Lombardi said that a cardinals’ commission appointed by Benedict to investigate the leaks is still working on the case, with the authority to “hear anyone they think might have information in this case.”
[13] According to a 20-page indictment issued by a Vatican judge, the former butler told prosecutors that he started the leaks because he was convinced that “evil and corruption” were “everywhere” in the church, and that he acted as an “infiltrator” of the Holy Spirit.
[14] The Vatican posted a record loss of $19 million (15 million euros) in 2011, its worst deficit in more than a decade. Vatican officials blamed the loss on the “negative trend of global financial markets, which made it impossible to achieve the goals laid down in the budget,” in an announcement on Thursday (July 5, 2012).