Archive for the ‘ஊட்டி’ Category

உல்லாச ஊட்டி பாதிரிக்கு போப் மன்னிப்பு கொடுத்து, வேலையில் அமர்த்தியதை எதிர்த்து பாதிக்கப்பட்ட (கற்பழிக்கப்பட்ட) பெண் மறுபடியும் வழக்கு!

ஏப்ரல் 22, 2016

உல்லாச ஊட்டி பாதிரிக்கு போப் மன்னிப்பு கொடுத்து, வேலையில் அமர்த்தியதை எதிர்த்து பாதிக்கப்பட்ட (கற்பழிக்கப்பட்ட) பெண் மறுபடியும் வழக்கு!

Megan Peterson is a sexual abuse survivor who was assaulted by a priest when she was 14 years old. Peterson pictured on February 23, 2016 in Queens, New York.

ஜோசப் ஜெயபால் மீது இரண்டு செக்ஸ் புகார்கள், பாலியல் வழக்குகள் மற்றும் பிடோபைல் விசாரணைகள்: ஜோசப் ஜெயபால் தமிழ்நாட்டை சேர்ந்த கத்தோலிக்க ஐயர், சாமியார் மற்றும் துறவி, அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணம், குரூக்ஸ்டன்னில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கத்தோலிக்க பாதிரியாராக 2004–2005 ஆண்டுகளில் வேலை பார்த்து வந்தவர்.  தமிழகத்தைச் சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை மின்னசோட்டாவில் தங்கியிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு தேவாலயத்துக்கு வந்த மேகன் பீட்டர்ஸன் [Megan Peterson] என்கின்ற 14 வயது சிறுமியை அவர் கற்பழித்ததாகவும், 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை அவரை தொடர்ந்து மானபங்கம் செய்து வந்ததாகவும் ஜெயபால் மீது புகார் கூறப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டது. மேலும் இந்த உண்மைகளை வெளியே சொன்னால் உன்னை சும்மா விடமாட்டேன் என்றும், அந்த சிறுமியை அவர் மிரட்டியதாகவும் கூறப்பட்ட தொடர்பாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தவிர இன்னொரு பெண்ணும் இவர் மீது புகார் கொடுத்திருந்தாள். இத்தகைய குற்றங்கள் அமெரிக்காவில் தீவிரமாகக் கருதப்படுவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

Peterson confession about Jeypaul rape2005லிருந்து 2012 வரை ஊட்டியில் உல்லாசமாக மறந்து வாழ்ந்த செக்ஸ்பாதிரி: உலகம் முழுவதும் கிருத்துவப் பாதிரிகளின் செக்ஸ் குற்றங்கள் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமாகிக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய பாதிரி அமெரிக்காவில் கற்பழிப்பில் மாட்டிக் கொண்டது பெரிய பாதிப்பில் முடியும் என்பதனால், இந்த புகார் மீது விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் குற்றம் சுமத்தப்பட்ட பாதிரியார் ஜெயபால் 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் திருட்டுத்தனமாக இந்தியா வந்து விட்டார்.  ஆனால், சென்னை சிபிசிஐ, பிஷப் மற்ற கத்தோலிக்க உயர் மடாலய தலைவர்களுக்கு இவ்விவகாரங்கள் எல்லாம் நன்றாகவே தெரியும். இதனால், யாருக்கும் தெரியாமல் ஊட்டி மடாலயத்தில் இவர் தலைமறைவாகத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படியே, ஊட்டியில், அந்த உல்லாச பாதிரி ஜாலியாக சகல வசதிகளுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், வழக்கம் போ;அ சர்ச் ஆவணங்களில், இவர்க்கு அது தண்டனை போலவும், பாவப்பரிகாரத்திற்காகத்தான் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டதாவும், அவர் அதன்படியே விசுவாசமாக வேலைசெய்து வருவதாகவும் கூறப்பட்டன. அவர் பாதிரியாராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.

Megan Peterson sexually harassaed by Catholic priest2012ல் அமெரிக்கா கேட்டுக் கொண்டதற்காக, செக்ஸ் பாதிரி, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப் பட்டது: ஆனால், அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இதனிடையே, அவர் மீதான கற்பழிப்பு வழக்கை விசாரித்து வந்த ரெசிவ் கவுன்டி கோர்ட்டு பாதிரியார் ஜெயபாலை கைது செய்யும்படி 2010-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி வாரண்டு பிறப்பித்தது. ஆனாலும், இந்தியாவுக்கு திரும்பிய ஜெயபால் தன் மீது சிறுமி கூறிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால், ஜோசப் ஜெயபால் இந்தியாவில் மறைந்து வாழ்வது தெரிந்து விட்டது. அமெரிக்காவில் இத்தகைய கற்பழிப்புகள், பிடோபைல் செக்ஸ் குற்றங்கள், பாலியல் வன்புணர்ச்சிகள் தீவிர குற்றமாக்கப் பட்டு, குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், இன்டர்போல் மூலம் “சிகப்பு எச்சரிக்கை அறிவிப்பு” கொடுக்கப்பட்டு, அவரை எப்படியாவது அமெரிக்க நிதிமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்ரு ஆணையிடப்பட்டது. இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு பாதிரியார் ஜெயவேலை வழக்கு விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, இந்தியாவிலிருந்து அவர் முறைப்படி நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கைதியாக சிறையில் அடைபட்டிருந்த காலத்திலேயே அவர் ஓராண்டு தண்டனையை கழித்து விட்டதாககூறி, பின்னர் விடுவிக்கப்பட்டார்[1] என்று மாலைமலர் கூறுகிறது. ஆனால் உண்மையில் அவர் கத்தோலிக்கப் பாதிரி, அதனால், கிருத்துவத்திற்கு மானம், அவதூறு, கெட்டப் பெயர் ஏற்படும் என்று குரூக்ஸ்டன் டையோசிஸ் பீட்டர்ஸுனுக்கு இழப்பீடு கொடுத்து சமரசம் செய்து கொண்டது.

Megan Peterson

கற்பழிப்புப் பாதிரியாருக்குப் பரிந்துரைத்த பாதிரிகளும், பாவமன்னிப்பு அளித்த போப்பும் (ஜனவரிபிப்ரவரி 2016): இந்நிலையில், ஜோசப் பழனிவேல் ஜெயபால் மீண்டும் பாதிரியாராக பணியாற்றுவது தொடர்பாக தமிழகத்தின் உதகைமண்டலத்தில் உள்ள மறைமாவட்ட பேராயர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வாடிகன் நகரில் உள்ள அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதுவே பெரிய வெட்கக்கேடு மற்றும் பெண்மையை இழிவு படுத்தும் அராஜக செயலாகும். இந்தியாவில், தமிழகத்தில் கண்டதற்கு எல்லாம், கலாட்டா, ஆர்பாட்டம், போராட்டம் என்றெல்லாம் செய்து வரும் அதிரடி கூட்டங்கள் இதைக் கண்டுகொள்ளவே இல்லை. பெண்ணிய வீராங்கனை சங்கங்கள் மூடிக் கொண்டு இருந்தன. பகுத்தறிவு, நாத்திக, திராவிட, கம்யூனிஸ சித்தாந்திகள் பொத்திக் கொண்டு இருந்தனர். காஞ்சி அர்ச்சகர், நித்தியானந்த விவகாரங்களில் விடியோ காட்டிக் கொண்டும், ஆபாசமாக ஜோக், கார்ட்டூன், படங்கள், கதைகள் என்று வரிந்து கட்டிக் கொண்டு 24 x 7 ரீதியில் செயல்பட்ட ஊடகக்காரர்களையும் காணவில்லை. ஆனால், பிஷப், பாதிரிகள் பரிந்துரை விளைவாக, அவர் மீது விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி மாதம் 2016ல் நீக்கப்பட்டது. இதற்கான உத்தரவை பிஷப் அமல்ராஜ் என்பவர் பிறப்பித்தார். உலகில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமைபீடமான வாடிகன் நகரில் இருந்து போப் பிரான்சிஸ் இதற்கான உத்தரவை பிறப்பித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின. எனினும், ஜோசப் பழனிவேல் இன்னும் எந்த தேவாலயத்திலும் பாதிரியாராக பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.

Jeypaul-the sex-priest

Jeypaul-the sex-priest

பாதிக்கப்பட்ட பெண் கோபித்து மறுபடியும் வழக்குத் தொடர்ந்துள்ளது (ஏப்ரல் 2016): “2012–ம் ஆண்டு, ஜோசப் ஜெயபால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அவர் மீதான வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதற்கிடையே அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அவரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, மயிலாப்பூரில் உள்ள உதகமண்டலம் டயோசிசன் அவரை மீண்டும் பணியில் அமர்த்திக்கொள்ள வாடிகன் அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டது”, என்று தினத்தந்தி அரைகுறையாக செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. “மயிலாப்பூரில் உள்ள உதகமண்டலம் டயோசிசன்” முதலியவை பேத்தலாக இருக்கிறது. இதிலிருந்தே ஒன்று உண்மை அவருக்குத் தெரியவில்லை அல்லது உண்மையினை மறைக்கின்றார் என்றாகிறது. அவர் மீதான தடை நீக்கப்பட்டதே, அப்பெண்ணின் உரிமைகளை மீறுவதாகியது. அதனால், 26 வயதாகும், அந்த இளம் பெண் அதனால் திகைப்படைந்து, எதிர்க்க தீர்மானித்தாள்[2].

Christian-phedophile-sex-rapist

Christian-phedophile-sex-rapist

கிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர்களால் பாலியில் ரீதியில் பாதிக்கப்பட்டு தப்பித்து உயிர் வாழும்ஸ்நாப்என்ற அமைப்பினர் இதனை கடுமையாக எதிர்ப்பது: பாதிரியார் ஜோசப் ஜெயபாலால் மறுபடி பணிக்கு அமர்த்தப்பட்டது, பாதிப்புக்கு ஆளான 26 வயது பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது[3]. இதற்கிடையில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியார் மீதான தடை நீக்கப்பட்டதை கண்டித்தும், இந்த உத்தரவை பிறப்பித்த பிஷப் அம்ல்ராஜின் உத்தரவை எதிர்த்தும் அமெரிக்க கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் 18-04-2016 அன்று வழக்கு தொடர்ந்துள்ளார்[4]. இதையடுத்து பாதிரியார் மீதும், உதகமண்டலம் டயோசிசன் மீதும் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக அந்தப் பெண்ணின் சார்பில் மின்னசோட்டா வக்கீல் ஜெப் ஆன்டர்சன் [Minnesota attorney Jeff Anderson] அறிவித்துள்ளார்[5]. ஜோசப் பழனிவேல் போன்றவர்களை பாதிரியாராக பணியாற்ற அனுமதித்தால் இந்தியாவில் உள்ள பெண் குழந்தைகளின் நிலைமை ஆபத்தாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்[6]. கிருத்துவப் பாதிரிகள், பாஸ்டர்கள் முதலியோர்களால் பாலியில் ரீதியில் பாதிக்கப்பட்டு தப்பித்து உயிர் வாழும் “ஸ்நாப்” [SNAP (Survivors Network of those Abused by Priests)] என்ற அமைப்பினர் இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது[7]. மேகன் பீட்டர்ஸன் கூறும் பொழுது, “போப் இப்பொழுதுதான், பிடோபைல்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்றார், ஆனால், அத்தகைய பாதிரிக்கு மறுபடியும் பணி கொடுத்துள்ளது திகைப்பாக இருக்கிறது[8]. இதிலிருந்தே சர்ச் (போப் மற்றும் வாடிகன்) யாருக்கு ஆதரவாக இருக்கிறது என்பதனை தெரியப்படுத்துகிறது[9]. மேலும் சர்ச் குழந்தைகளை, சிறுவர்-சிறுமிகளை (இத்தகைய பிடோபைல் / செக்ஸ் குற்றவாளிகளிடமிருந்து) பாதுகாப்பதில்லை என்று தெரிகிறது,” என்று தனது பாதிப்பை வெளிப்படுத்தினார்[10].

© வேதபிரகாஷ்

22-04-2016

[1] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/20105942/1007385/Lawsuit-filed-against-Indian-Bishop-Amalraj.vpf

[2] Daily News, Catholic church in India lifts suspension of priest convicted last year of sexually assaulting girl, 14, in U.S., THE ASSOCIATED PRESS; Sunday, February 14, 2016, 6:11 AM

http://www.nydailynews.com/news/world/indian-catholic-church-lifts-perv-priest-suspension-article-1.2531203

[3] http://www.dailythanthi.com/News/World/2016/04/20000612/Served-in-the-United-StatesCaught-in-sex-scandal.vpf

[4] http://www.nydailynews.com/news/world/u-s-survivor-sue-india-church-reinstating-perv-priest-article-1.2606218

[5] தினத்தந்தி, அமெரிக்காவில் பணியாற்றியபோது செக்ஸ் புகாரில் சிக்கிய தமிழக பாதிரியார் மீதுவழக்கு , மாற்றம் செய்த நாள்: புதன், ஏப்ரல் 20,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்:புதன், ஏப்ரல் 20,2016, 12:06 AM IST.

[6] மாலைமலர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பாதிரியார் மீதான தடை நீக்கமா?: அமெரிக்க கோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு, பதிவு: ஏப்ரல் 20, 2016 10:59.

[7] Daily News, U.S. church sex abuse survivor to sue diocese in India for reinstating perv priest, Monday, April 18, 2016, 7:26 PM.

[8] http://www.nydailynews.com/new-york/queens-woman-shocked-vatican-reinstates-priest-raped-article-1.2542685

[9] The Vatican’s decision to reinstate Jeyapaul was especially disturbing, Peterson told The News earlier this year, because Pope Francis said a month later there was a special place in hell for bishops and other church officials who enable rather than report child-molesting clergymen. “It’s very clear what side the Church is on and it’s not about child protection or about morality,” said Peterson, a 26-year-old artist who moved from Queens to Wisconsin earlier this month to attend art therapy school. “The bottom line is that the Church is not protecting children.”

[10] Daily News, Queens woman, repeatedly raped by priest at 14, stunned to learn he’s reinstated by Catholic Church — ‘He’d tell me I would have to go to confess to making him impure’, By Michael O’Keeffe, NEW YORK DAILY NEWS; Updated: Wednesday, February 24, 2016, 4:03 PM

 

பாஸ்டர் அருள்தாஸ், பாதிரி பிரபுதாஸ் கற்பழிப்பு முறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன!

செப்ரெம்பர் 5, 2015

பாஸ்டர் அருள்தாஸ், பாதிரி பிரபுதாஸ் கற்பழிப்பு முறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன!

அருள்தாஸ் என்ற கிறிஸ்தவ மத போதகர்.

அருள்தாஸ் என்ற கிறிஸ்தவ மத போதகர்.

அருள்தாஸ் கடைபிடித்த பழையமுறை: நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பகுதியில் வசிப்பவர் அருள்தாஸ் (40) என்ற கிறிஸ்தவ மத போதகர். மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் ஹாஸ்டல் நடத்தினார்[1].  ஏழைக்குடும்பங்களை அணுகி அவர்களது பெண்களை தத்து எடுத்துக் கொண்டு, பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறேன், ஹாஸ்டல் வசதி எல்லாமே இலவசம் என்று கூறி இளம்பெண்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து, ஹாஸ்டலிலும் தங்க வைத்துள்ளார். ஆனால், நாளாக-நாளாக, பெண்கள் வயதாக பாதிரியார் காமலீலைகளில் ஈடுபட்டார். இதனால், இவர் மீது புகார் செய்யப்பட்டது. பாதிரியாரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அருள்தாஸ் ஏற்கனவே கோத்தகிரியை அடுத்த கன்னேரிமுக்கு என்ற இடத்தில் ஹாஸ்டல் நடத்தியுள்ளார். அங்கு இதுபோல் பிரச்னை ஏற்படவே 2 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையத்திற்கு ஹாஸ்டலை மாற்றியுள்ளார். பெண் குழந்தைகள் உள்ள ஏழை குடும்பத்தினரை அணுகி, மூளைச் சலவை செய்து படிக்க வைப்பதாக கூறி அவர்களை ஹாஸ்டலில் சேர்த்துள்ளார். இப்பொழுது, ஆகஸ்ட் மாதம் ஒரு பெண் புகார் கொடுத்ததன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டாகவே பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணுக்கு பல முறை அபார்ஷன் செய்யப்பட்டுள்ளது[2].

அருள்தாஸ் என்ற கிறிஸ்தவ மத போதகர் கைது - தினகரன் போட்டோ

அருள்தாஸ் என்ற கிறிஸ்தவ மத போதகர் கைது – தினகரன் போட்டோ

பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார்: திருமணம் செய்வதாக கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மத போதகர் கைது செய்யப்பட்டார்[3]. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது[4]: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குண்டா என்ற இடத்தை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய 17 வயது மகளை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமரன்குன்று பகுதியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு படிக்க வைப்பதாக கூறி அழைத்து சென்றார். அங்குள்ள பள்ளியில் அந்த மாணவியை பிளஸ்–2 படிக்க வைத்தார்[5]. பல வருடங்களாக பழகியதாலும், அருள்தாஸ் அம்மாணவியிடம் சகஜமாக பழகி வந்து தன்னுடைய வேலையைக் காட்டினார் போலும். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி திரும்பிய அந்த மாணவி தன் பெற்றோரிடம் அழுது கொண்டே விசயத்தைச் சொன்னாள். இதனால், கோபமுற்ற அவர்கள் போலீஸாரிடம் புகார் செய்ய தீர்மானித்தனர். அதன்படியே, பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், தன்னை படிக்க வைப்பதாக கூறி அழைத்து சென்ற அருள்தாஸ், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி இருந்தார்[6]. விசயத்தை வெளியே சொன்னால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டி சித்ரவதையும் செய்துள்ளார்[7].

அருள்தாஸ் கிறிஸ்தவ மத போதகர் - கைது - தினத்தந்தி மற்றும் தினகரன் போட்டோ

அருள்தாஸ் கிறிஸ்தவ மத போதகர் – கைது – தினத்தந்தி மற்றும் தினகரன் போட்டோ

மத போதகர் அருள்தாஸ் கைது[8]: இந்த புகாரின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணியம், கோத்தகிரி சப்–இன்ஸ்பெக்டர் பிராங்களின் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மதபோதகர் அருள்தாசை கைது செய்தனர்[9]. உண்மையில் பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண், கடந்த 3 மாதத்துக்கு முன்பு மே மாதத்திலேயே கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுள்ளதால், இம்முறை, வேறு வழியில்லாததால், கைது செய்து முறைப்படி, அவரை ஊட்டி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, உரிய விசாரணைக்குப் பிறகு. போலீசார் சிறையில் அடைத்தனர்[10] போலும். இதற்கிடையே பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறிய மாணவியை மருத்துவ சோதனைக்காக போலீசார் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பலமுறை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது[11]. பி.டி.ஐ.செய்தியாக மாறியதால், ஆங்கில ஊடகங்களில் அப்படியே செய்தி வெளியானது[12]. அதாவது, கிறிஸ்தவ பாதிரியார் திரும்ப-திரும்ப செக்ஸ்-தொல்லைக் கொடுத்திருக்கிறார், பாலியல் ரீதியில் தாக்கியிருக்கிறார், என்று தலைப்பிட்டு செய்தியை நான்கு-ஐந்து வரிகளில் ஆங்கில ஊடகங்கள் போட்டன[13]. கோத்தகிரிக்குச் சென்று விசாரிக்க நிருபர்கள் இல்லையா அல்லது யாராவது தடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை. “கோவை போஸ்ட் நெட்வொர்க்” என்று அருகில் இருந்தும், சிக்கனமாக அவ்வாறே செய்தியை வெளியிட்டது[14]. கைதான அருள்தாஸ், மாணவியின் குடும்ப ஏழ்மையை பயன்படுத்தி அவரிடம் தவறாக நடந்து கொண்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது போன்று வேறு யாரையாவது அருள்தாஸ் ஏமாற்றி இருக்கிறாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Aruldass arrest - Deccan Chronicle news

Aruldass arrest – Deccan Chronicle news

மனைவி பிரிந்து விட்டார்[15]: பாதிரியார் அருள்தாசுக்கு திருமணமானது. ஆனால் குழந்தைகள் இல்லை. கருத்து வேறுபாட்டால் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண், கடந்த 3 மாதத்துக்கு முன்பு கோத்தகிரி போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதிலிருந்தே, அருள்தாஸ் அல்லது கிறிஸ்தவ நிறுவனம் மற்றும் போலீஸாருக்கு இடையே உள்ள விவகாரமும் வெளிப்படுகிறது. ஊட்டி-கொடைக்கானல் பகுதிகளில் கிறிஸ்தவ பாதிரிகள், ஏன் பிஷப்புகளின் காமக்களியாட்டங்கள் உலகளவில் பிரசித்தி பெற்ற விவகாரங்களாக இருக்கின்றன. அந்நிலையில் 2 மாதம் கழித்த நிலையில் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளனர் எனும் போது விசித்திரமாக உள்ளது. இந்தப் பெண் மட்டுமின்றி ஹாஸ்டலில் தங்கியுள்ள வேறு பெண்களிடமும் அருள்தாஸ் தவறாக நடந்திருக்கலாம் என மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹாஸ்டலில் இப்போது 15 சிறுமிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பலர் பள்ளி மாணவிகள். போலீசார் விசாரணைக்கு சென்றபோது புகார் கொடுத்த ஒரு சிறுமி மற்றும் கூடலூரை சேர்ந்த இன்னொரு சிறுமி மட்டுமே இருந்துள்ளனர்.

Aruldass arrest - Indian Express news

Aruldass arrest – Indian Express news

ஹாஸ்டலுக்கு அங்கீகாரம் இல்லை[16]: அருள்தாஸ் நடத்தி வந்த ஹாஸ்டலுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. அங்கீகாரம் இல்லாத நிலையில் ஏழை பெண்களை, சிறுமிகளை அவர் எப்படி ஹாஸ்டலில் சேர்த்தார். இதற்கு முன்னதாக அவர் ஹாஸ்டல் நடத்திய பகுதியில் இதேபோன்று குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் அதே மாவட்டத்தில் மீண்டும் அவர் ஹாஸ்டல் நடத்தியது எப்படி? என்றும் மக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். இருப்பினும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதை கவனிக்கலாம். மேலும் கிருத்துவர்கள் பெரும்பாலும் இத்தகைய குழந்தைகள் காப்பகம், சிறார் செக்ஸ்-விவகாரங்கள், இளம்பெண்கள் கற்பழிப்புகள், பாலியல் வன்புணர்ச்சிகள் என்று தொடர்ந்து ஈடுபடுவது, கைதாவது என்ற நிலையுள்ளதையும் கவனிக்கலாம், ஆனால், அவர்கள் மாறுவதாக இல்லை என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

அருள்தாஸ் மற்றும் பிரபுதாஸ்

அருள்தாஸ் மற்றும் பிரபுதாஸ்

பாஸ்டர் அருள்தாஸ், பாதிரி பிரபுதாஸ் கற்பழிப்பு முறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன: அருள்தாஸ் மற்றும் பிரபுதாஸ் இவர்களின் செக்ஸ்-வேலைகள், பாலியல்-யுக்திகள், காமக்கிரியைகள், அணுகுமுறைகள், செயல்பாடுகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.

  1. ஏழைகளுக்கு என்று குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லம், மகளிர் இல்லம் என்று ஆரம்பிப்பது.
  1. அந்நிய நாடுகளிலிருந்து நிதியுதவி பெறுவது, அதிலிருந்து பாதி செலவழிப்பது, பாதி அவர்களே தங்களது சுயவிருப்பங்களுக்கு செலவு செய்வது.
  1. பேற்ற நிதியைச் செலவழித்தேன் என்று கணக்கு காட்டுவது- காந்தி சொன்னதை இங்கு நினைவு படுத்தி கொள்ளலாம்.
  1. பதிவு செய்வது-செய்யதது பற்றி கவலைப்படுவதே இல்லை. பிரச்சினை வந்தாலும் கவலைப்படுவதில்லை என்று நூற்றுக்கணக்கணக்கான வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.
  1. மனைவி பிரிந்து விட்டார், ஹாஸ்டலுக்கு அங்கீகாரம் இல்லை என்பதெல்லாம் ஒரே மாதிரியான விசயங்களாக இருக்கின்றன.
  1. இல்லை, ஒரு வேளை அத்தகைய முறையைப் பின்பற்றுகிறார்களோ என்று தோன்றுகிறது.
  1. சட்டப்படி இவர்கள் விவாக ரத்து எல்லாம் செய்ய மாட்டார்கள் போலும், ஆனால், கணவன்மார்கள் இவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை, மனைவிகள் எப்படி அமைதியாக இருக்கிறார்கள்.
  1. தங்கள் பெண்கள், சகோதரிகள் அவ்வாறு பாதிக்கப்பட்டால் சும்மா இருப்பார்களா, இல்லை, தங்களது முந்தைய கணவர்கள், பிரிந்து வாழும் கணவர்கள் என்று இருந்து விடுகிறார்களா?
  1. எல்லாமே பாலியல் குற்றங்கள், குறிப்பாக கற்பழிப்புகள் என்றாலும், கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்டால், தேசிய அளவில் செய்திகள் வரவிடாமல் தடுத்து, குறைத்து விடுகிறார்கள், அமுக்கி வாசிக்கிறார்கள் என்பது பல விசயங்களில் தெரிய வருகின்றது.
  1. செய்திகளை அறிவித்தல், போடுதல் முதலியவற்றிலும் பாரபட்சம் உள்ளதை, பலமுறை அலசி எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

வேதபிரகாஷ்

© 05-09-2015

[1] மாலைமலர், படிக்க வைப்பதாக கூறி மாணவியிடம் பலாத்காரம்: கைதான மதபோதகர் சிறையில் அடைப்பு, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 01, 9:16 AM IST.

[2] http://www.maalaimalar.com/2015/09/01091639/Claiming-that-they-had-read-to.html

[3] Deccan Chronicle, Christian pastor held for sexual torture of schoolgirl, Deccan Chronicle | B. Ravichandran | September 01, 2015, 05.30 am IST

[4] தினத்தந்தி, திருமணம் செய்வதாக கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மத போதகர் கைது, மாற்றம் செய்த நாள்:செவ்வாய், செப்டம்பர் 01,2015, 4:45 AM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 01,2015, 12:20 AM IST.

[5] http://www.deccanchronicle.com/150901/nation-crime/article/christian-pastor-held-sexual-torture-schoolgirl

[6]  http://www.dailythanthi.com/News/Districts/Nilgiris/2015/09/01002034/Plus-the-issue-of-marriage-2-cleric-arrested-for-raping.vpf

[7] நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 16 வயது இளம் பெண்ணை மானபங்கப்படுத்தி சித்ரவதை செய்ததாக மதபோதகர் அருள்தாஸ்,40 என்பவர் மீது போலீசில் புகார் கூறப்பட்டது. கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1331218

[8] Indian Express, Pastor Arrested for Repeatedly Sexually Assaulting Minor Girl, By PTI, Published: 31st August 2015 06:51 PM, Last Updated: 31st August 2015 06:51 PM

[9] தினமலர், இளம்பெண் மானபங்கம்: மத போதகர் கைது, ஆகஸ்ட்.31, 2015.15:42

[10] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Pastor-Arrested-for-Repeatedly-Sexually-Assaulting-Minor-Girl/2015/08/31/article3003212.ece

[11] Sakshipost, Pastor Arrested for Repeatedly Sexually Assaulting Minor Girl,  , MONDAY, 31 AUGUST 2015 18:15.

[12] http://www.sakshipost.com/index.php/news/national/62489-pastor-arrested-for-repeatedly-sexually-assaulting-minor-girl.html?psource=Feature

[13]  Covai Post Network, Pastor arrested for sexually assaulting minor girl, August 31, 2015.

[14] http://www.covaipost.com/local/pastor-arrested-for-sexually-assaulting-minor-girl/

[15] தினகரன், நீலகிரி அருகே ஹாஸ்டல் நடத்தி பெண்களை பாலியல் பலாத்காரம் , மத போதகர் சிறையில் அடைப்பு, செப்டம்பர்.1,2015.14.52.20.

[16] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=164620

சிறுவர் செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல், சிறுவர் ஆபாசப் படம்: உலகெங்கிலும் 348 பேர் கைது!

நவம்பர் 16, 2013

சிறுவர் செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர் பாலியல், சிறுவர் ஆபாசப் படம்: உலகெங்கிலும் 348 பேர் கைது!

சிறுவர்செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர்பாலியல், சிறுவர்ஆபாசப்படம்: சிறுவர், சிறுமிகளை வைத்து ஆபாச படம் எடுப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது கொடூர குற்றமாக கருதப்படுகிறது. ஏனெனில், மேனாட்டு நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியங்களில் அது வழக்கமாக இருந்துள்ளதால், முதலில் சட்டமீறலாக கரூதப்படவில்லை.  குறிப்பாக அமெரிக்கர் மற்றும் ஐரோப்பியர் (ஆஸ்திரேலியாவையும் சேர்த்து) பல போர்வைகளில் கீழ்திசைநாடுகளில் இதற்காகவே வருகின்றனர். குறிப்பாக அனாதை இல்லங்கள் அவர்களது பசிக்கு உணவைத் தருகின்றன. இதற்காக அந்நாடுகளிலிருந்து பணமும் அனுப்பப்படுகிறது. 10-15 வருடங்களில் அவர்களுக்கு சப்ளை செய்ய சிறுவர்-சிறுமியர் தாயாராகி விடுகின்றனர். எப்படி அரேபிய ஷேக்குகள் ஒன்று பெண்களை வேலைக்காரிகள் போன்று அல்லது மனைவி போன்று அழைத்துச் செல்கின்றனர் அல்லது சட்டரீதியில் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனரோ, அதே போல, கிருத்துவ மிஷனரிகள், தரும நிலையங்கள் என்ற ரீதியில் / போர்வையில் அவை நிதியுதவி அளிக்கின்றன. இந்தியாவில் கடந்த 30-40 ஆண்டுகளாக இந்த் பீடோபைல்களின் அட்டகாசம் அதிகமாகி விட்டன. பலர் கைது செய்யப் பட்டாலும், “காமன்வெல்த்”  போர்வையில் பலர் தப்பியுள்னர்.

சிறுவர்செக்ஸ் / வன்புணர்ச்சி, சிறுவர்பாலியல், சிறுவர்ஆபாசப்படம்இந்தியாவில்அதிகமாதல்: இவற்றைப் பற்றி கடந்த 5 ஆண்டுகளாக அதிகமாகவே எழுதியுள்ளேன்[1]. உதாரணத்திற்கு சில கட்டுரைகளைக் குறிப்பிடுகிறேன்:

சமூகவிரோதசெயல்களுக்காககுழந்தைகள்கடத்தல்: சொல்கிறார்காங். எம்.பி.,

http://socialterrorism.wordpress.com/2011/08/15/pedophile-sex-abuse-sex-tourism-children-exploited/

சிறுமியின் நிர்வாணப்படத்தினை இண்டர்நெட்டில் பார்த்தரொமான்ஸ் நீதிபதி கைது!

http://socialterrorism.wordpress.com/2010/08/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/

ஷாஜி, பினு, பால்: இப்படி ஒன்று சேர்ந்து இளமைபாலியல் கொடூரம் நடத்துகிறார்களா?

http://socialterrorism.wordpress.com/2010/02/15/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D/

குழந்தைகள் விபசார மையமாகும் இந்தியா : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

http://socialterrorism.wordpress.com/2010/01/30/india-becomes-centre-of-pedophile/

சென்னைசெக்ஸ்நகரமாகமாறுகிறதா?

http://socialterrorism.wordpress.com/2009/11/30/chennai-becomes-sex-city-haven-for-pedophiles-and-fugitives/

கனடா விசாரணை மூலம் பலர் கைது செய்யப்படல்: கனடா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் இது சட்ட விரோதமாகும். கனடா நாட்டில் திருட்டுத்தனமாக சிறுவர், சிறுமிகளை வைத்து வீடியோவில் ஆபாச படம் பிடித்து வெளியிடும் தொழிலில் அதிகரித்து. எனவே இதை ஒடுக்க டொராண்டோ போலீசார் திடீர் வேட்டையில் இறங்கினர்[2]. அப்போது டொராண்டோ நகரில் கடந்த 8 ஆண்டாக இந்த ஆபாசப்படம் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்ட முக்கிய புள்ளி ஒருவர் சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்ந்த 350 பேர் பற்றிய விவரம் கிடைத்தது. சிறுவர் ஆபாச படம் தயாரிப்பது குறித்து கனடா பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் உலகெங்கிலும் 348 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு சுமார் 400 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்[3]. இதில் பலர் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிகிறது[4].

பாதிரிகள், மதபோதகர்கள், மருத்துவர்கள் முதலியோர் அடக்கம்: இவ்வாறு கைது செய்யப்பட்டோரில், குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் 40 ஆசிரியர்கள், 9 மருத்துவர்கள், 32 செவிலியர்கள், 6 சட்ட அதிகாரிகள், 5 பாதிரிகள், 4 மத போதகர்கள், 3 வளர்ப்பு பெற்றோர்கள் போன்றவர்களும் அடங்குவர் என்று கனடா பாலியல் குற்றவியல் பிரிவின் தலைவரான பொலிஸ் பரிசோதகர் சோனா பெவன் டெஸ்ஜாடினஸ் தெரிவித்தார். அவுஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, கிரீஸ், தென்னாபிரிக்கா, ஹொங்கொங், மெக்சிகோ, நோர்வே மற்றும் அமெரிக்காவில் இருந்து 30 பொலிஸ் துறைப் படையினர் இந்த விசாரணையில் ஈடுபட்டனர். 35,000 லட்சத்திற்கு மேற்பட்ட புகைப்படங்களும், 9,000 வீடியோக்களும் இந்த விசாரணையில் சிக்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆபாச படம் வெளியிட்ட இணையத்தள நிறுவனம் மூடப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகக் கூறிய பொலிஸார் இதுவரை 386 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இந்த நடவடிக்கை மூலம் காப்பாற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“ஆபரேஷன் லிமா ஸ்டாம்பீட்” [Operation Lima]: “ஆபரேஷன் லிமா ஸ்டாம்பீட்” [Operation Lima] என்ற பெயரில் இந்த சோதனை, புலன் விசாரணை, கைது முதலியவை நடத்தப் பட்டன. அசோவ் பிலிம்ஸ்.காம்[5] என்ற கம்பெனியிடமிருந்து தான், இதைப் பற்றிய விவரங்கள் கிடைத்தன. அதாவது, சிறார்களை இவ்வாறு பாலியல் ரீதியில் துன்புறுத்த, எவ்வாறு குறிப்பட்ட வங்கிக் கணக்குகள் உபயோகப் படுகின்றன, என்ற விவரங்கள் கிடைத்ததை அடுத்து, விச்சாரணை செய்து குற்றவாளிகளைப் பிடித்தனர்[6]. குவின்ஸ்லாந்தில் மட்டும் 33 பேர் கைது செய்யப்பட்டனர். அவஎர்களது விவரங்கல் கீழ் வருமாறு[7]:

Thirty-three men were arrested across Queensland on child exploitation charges during Operation Lima Stampede:

  1. 1.       Teacher, 51, from Chermside: Charged with four counts of possessing child exploitation material and one count of using a carriage service to access child exploitation material.
  2. 2.      Lecturer, 52, from Maleny: Charged with two counts of possessing child exploitation material.
  3. 3.      Teacher, 51, from Clayfield: Charged with two counts of using a carriage service to access child exploitation material.
  4. 4.      Teacher, 28, from Cairns: Charged with three counts of possessing child exploitation material and one count of using a carriage service.
  5. 5.      Teacher, 53, from Bray Park: Charged with one count of possessing child exploitation material.
  6. 6.      Manager, 22, from Arana Hills: Charged with seven counts of child exploitation material and two counts of using a postal service to carry child pornography.
  7. 7.       Traffic controller, 60, from Bethania:Charged with 25 counts of possessing child exploitation material.
  8. 8.      Electrician, 23, from Algester: Charged with three counts of using a carriage service to access child pornography.
  9. 9.      Student, 29, from Runcorn: Charged with six counts of possessing child exploitation material, one count of using a carriage service to access CP and one count of intentionally importing tier 2 goods.
  10. 10.   Security advisor, 36, from Lutwyche: Charged with using a carriage service to access CP.
  11. 11.    Unemployed, 47, from Banyo: Charged with three counts of possessing child exploitation material, three counts of using a carriage service to access CP and one count of using a carriage service to transmit CP.
  12. 12.   Unemployed, 54, from Bribie Island: Charged with two counts of using a carriage service to access CP.
  13. 13.   Accountant, 52, from Redcliffe: Charged with four counts of using a carriage service to access CP.
  14. 14.   Nurse, 53, from Redcliffe: Charged with one count of possessing child exploitation material and three counts of using a carriage service to access CP.
  15. 15.   Unemployed, 42, from Surfers Paradise: Charged with one count of using a carriage service to access CP.
  16. 16.   Manager, 38, from Caboolture: Charged with two counts of using a carriage service to access CP.
  17. 17.    Storeman, 57, from Woodridge: Charged with three counts of using a carriage service to access CP and nine counts of using a postal service to carry CP.
  18. 18.   Retiree, 73, from Loganlea: Charged with two counts of possessing child exploitation material.
  19. 19.   Unemployed, 49, from Andergrove: Charged with 28 counts of possessing child exploitation material.
  20. 20.  Unemployed, 46, from Gladstone: Charged with 52 counts of possessing child exploitation material and one count of using a postal service to carry CP.
  21. 21.   Unemployed, 48, from Atherton: Charged with one count of possessing child exploitation material and two counts of using a postal service to carry CP.
  22. 22.  Retiree, 58, from Hawthorne: Charged with two counts of possessing child exploitation material and one count of using a postal service to carry CP.
  23. 23.  Unemployed, 46, from Bribie Island: Charged with one count of using a carriage service to carry CP.
  24. 24.  Bank manager, 57, from Boonah: Charged with two counts of possessing child exploitation material and one count of using a carriage service to carry CP. Fined $1000, no conviction recorded.
  25. 25.  Factory hand, 57, from Bundaberg: Charged with two counts of possessing child exploitation material.
  26. 26.  Retiree, 60, from Pialba: Charged with one count of using a carriage service to access CP.
  27. 27.   Unemployed, 22, from Doolandella: Charged with two counts of possessing child exploitation material.
  28. 28.  Carer, 37, from Redbank Plains: Charged with three counts of possessing child exploitation material and one count of using a carriage service to access CP.
  29. 29.  Plasterer, 62, Redbank Plains: Charged with seven counts of possessing child exploitation material and one count of using a carriage service to access CP.
  30. 30.  Manager, 61, Upper Coomera: Charged with one count of possessing child exploitation material.
  31. 31.   Shop assistant, 32, from Ferny Hills: Charged with one count of possessing child exploitation material and using a carriage service to access CP.
  32. 32.  Pensioner, 76, from Rochdale South: Charged with one count of possessing child exploitation material.
  33. 33.  Cleaner, 42, from Coombabah: Charged with one count of possessing child exploitation material.

© வேதபிரகாஷ்

16-11-2013


[6] Stampede Detectives in Brisbane received a file in early February from their counterparts in Canada with a list of bank accounts used to purchase child exploitation material from a Toronto company called Azovfilms.com.

ஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்

ஏப்ரல் 21, 2013

ஆபாசபேச்சு பாதிரி, கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும்

Sexy speaking Christian priest arrested 19-04-2013

2013  – மூன்று மாதங்களில் பல பாதிரிகளின் சட்ட மீறல்கள்,  கைதுகள்: ஆபாசபேச்சு பேசி வீட்டுக்க்கு அழைக்கும் பாதிரி, பணத்தைக் கொள்ளையடித்த பாதிரி, போலீஸை மிரட்டிய பாதிரி – இப்படி பலான பாதிரிகளும், பலவிதமான பாதிரிகளும் தமிழகத்தில் உலா வருவதும், குற்றங்களை செய்வதும், கைதாவதும், அதற்குப் பிறகு என்னாவாகிறது என்று ஒன்ற்ம் தெரியாத நிலையில் செய்திகள் வந்துள்ளன. இவர்களுக்கெல்லாம் எப்படி இந்த அளவிற்கு தைரியம் வருகிறது, துணிச்சலாக குற்றங்களை செய்து வருகிறார்கள், செய்தும் மறுபடியும் பணிகளில் வந்து அமர்ந்து விடுகிறார்கள், எப்படி வெளியே வருகிறார்கள், சட்டங்களின்று எப்படித் தப்பிக்கின்றனர் அல்லது அவர்கள் உண்மையிலேயே புனிதர்களாக இருந்து வெளியே வந்து விடுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் போது, பாதிப்புக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கர்த்தர் ஒருவேளை மன்னித்து விடுவார் என்று, அவர்கள் மறுபடியும் பாவமன்னிப்புப் பெற்று, பாவங்களை செய்ய வருகிறார்கள் போலும். இதோ வந்துள்ள செய்திகளைப் படிக்கவும்:

Jogn Mark hristian priwst arrested

 

சர்ச்சிற்கு வரும் பெண்களிடம் ஆபாசப் பேச்சு பேசும்  பாதிரி கைது  (16-03-2013): கோவை, மார்ச். 17, 2013 கோவை ஒண்டிப்புதூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருபவர் ஜான் மார்க் (வயது 63). இவர் ஏற்கனவே கோபி, ஈரோடு, பெருந்துறை, கோவை கணபதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சி.எஸ்.ஐ. பெண்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த பெண்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கிறிஸ்தவ ஆலயத்துக்கு முக்காடு போட்டுக் கொண்டு வரும் பெண்களிடம் முக்காடை நீக்கச்சொல்லி பாதிரியார் ஜான்மார்க் வற்புறுத்துகிறார்.  பெண்கள் ஐக்கிய சங்க கூட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும். ஆனால் ஜான்மார்க் கூட்டத்துக்கு வந்து பெண்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஆபாசமாக கிண்டலடித்து பேசுகிறார். எங்களை வெறிக்க வெறிக்க பார்ப்பதுடன் ஆபாச செய்கையும் செய்கிறார்.  மேலும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறும் அழைக்கிறார்[1] என்றும் குறிப்பிட்டிருந்தனர். புகார் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஜார்மார்க்கை கைது செய்தார். அவர் மீது 509 (பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டு அழைப்பு விடுவது), 506(1) கைகள் மூலம் சைகையால் கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கைதான பாதிரியார் ஜான் மார்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்[2].

Sexy christianity - pastor sex India.2

பாதிரி வீட்டில் கொள்ளையடித்த பாதிரி கைது  (25-02-2013): புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிரியார் ஒருவரது வீட்டில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் மற்றும் பொருட்கள் திருடு போயின. இந்த வழக்கில் இன்னொரு பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[3]. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், “என் அண்ணன் ஜெயராஜ், திண்டுக்கல் டி..எல்.சி. சர்ச்சில் பாதிரியாராகவும், .டி.. நிர்வாகியாகவும் பணிபுரிந்தார். ஜனவரி 30ம் தேதி, உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் மருத்துவமனைக்கு செல்ல 1.5 லட்சம் ரூபாய் கொண்டு வருமாறும் கூறினார். பணத்தை நான் கொண்டு வந்து அவரது வீட்டில் வைத்தேன். அவரது உடல் நிலை மோசமானது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடலை தஞ்சாவூரில் அடக்கம் செய்தோம். மீண்டும் திண்டுக்கல் வந்த போது என் அண்ணன் வீட்டின் பூட்டை .டி.., ஊழியர் அல்போன்ஸ், அம்மாபட்டி பாதிரியார் மார்கஸ் ஆகியோர் உடைத்து 1.5 லட்சம் ரூபாய் மற்றும் பொருட்களை திருடிவிட்டு புது பூட்டு போட்டதும், இதற்கு டி..எல்.சி., செயலர் சார்லஸ் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது”, என்று தெரிவித்திருந்தார்[4]. இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

Christian priest loot money

பெண் எஸ்..,க்கு கொலை மிரட்டல்பாதிரியார் கைது  (07-01-2013): ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், பெண் எஸ்.ஐ., சாந்தி ராணிக்கு கொலைமிரட்டல் விடுத்த, பாதிரியார் ஞானபிரகாசம் கைது செய்யப்பட்டார். தங்கச்சிமடம் வலசை தெரு சேர்ந்த பாதிரியார் ஞானபிரகாசம், 62. ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ., சாந்தி ராணியிடம் தகவல் கேட்டுள்ளார்[5]. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னை அவதூறாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எஸ்.ஐ., சாந்தி ராணி புகார் கொடுத்தார். அவரது புகாரின்படி, பாம்பன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோசப் செல்வராஜ் வழக்கு பதிந்து, பாதிரியாரை கைது செய்தார்[6].

 

வேதபிரகாஷ்

21-04-2013

 

 


மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி!

ஏப்ரல் 21, 2013

மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த பாதிரி – தில்லியில் அப்படியென்றால் ஊட்டியில் இப்படி!

Ooty christian priest molest a girl student2

இந்தியாவில் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்: இந்தியாவில் இப்பொழுது முக்கியமான செய்தி, தலைப்புச் செய்தி, தலைநகர் தில்லியைக் குலுக்கும் செய்தி –

  • இந்தியர்கள் பெண்களைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
  • 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.
  • பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பே இல்லை.
  • அதாவது ஆண்கள் எல்லோரும் அயோக்கியர்கள்.
  • போலீஸார் பணம் வாங்கும் குண்டர்கள்
  • காக்கிச்சட்டையில் உலா வரும் உன்மத்தர்கள்

என்று ஆங்கில டிவி-செனல்கள் வரிந்து கட்டிக் கொண்டு வெளியிட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் நடந்து வரும் மற்ற கற்பழிப்புகள் பற்றி எந்த பெண்களும் இவ்வாறு வீரத்துடன் தெருக்களில் ஏன் இறங்கிப் போராடவில்லை என்று தெரியவில்லை.

Ooty christian priest molest a girl student3

ஊட்டி – கொடைக்கானல்[1] கிருத்துவ பிஷப்புகள்,  பாதிரிகளுக்கும் செக்ஸுக்கும் நிரம்பவே தொடர்பு உள்ளது: இதைப் பற்றி நான் பல விவரங்களுடன் ஆதாரங்களுடன் பதிவுகளை செய்துள்ளேன்[2]. குழந்தைக் கற்பழிப்பு[3] ஏகப்பட்டவை செய்துள்ளனர்[4]. குறிப்பாக கிருத்துவ பிஷப்புகள்[5], பாஸ்டர்கள், பாதிரிகள் ஏன் தொடர்ந்து அவ்வாறான செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்டு[6], ஆனால், அவ்விஷயத்தை அடக்கி வாசிக்கின்றனர்[7], மறைக்கின்றனர்[8], பிறகு மறந்தும் விடுகின்றனர். வாடிகன் வரையில் உள்ள பெரிய சாமியார்களும் இதனைக் கட்டுப் படுத்துவதாகத் தெரியவில்லை[9].

Ooty christian priest molest a girl student4

கிருத்துவப் பள்ளிகளில் செக்ஸ் – சில்மிஷம்: கிருத்துவப் பள்ளிகளில் மாணவிகளை செக்ஸ் வக்கிரத்திற்குட்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. தூத்துக்குடி[10], கோயம்புத்தூர்[11], திருச்செந்தூர்[12], பெங்களூரு[13], …………என்று பல இடங்களில் உள்ள பள்ளிகளில் கிருத்துவ பஆதிரிகள் அவ்வாறான செக்ஸ் சில்மிஷங்களை செய்து வருகின்றனர். இப்பொழுது பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு சட்ட விதிகளை கடுமையாக்கி உள்ளது. இருப்பினும் பாலியல் கொடுமைகள் குறைந்த பாடில்லை. 9-ம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்த அவலம் ஊட்டியில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Ooty christian priest molest a girl student 2013இப்பொழுதெல்லாம் குற்றவாளிகள் முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. அந்த அளவிற்கு வெட்கப்படுகிறோம் என்று மறைத்துக் கொள்கிறார்களா அல்லது அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று மறைத்துக் கொள்கிறார்களா?

ஊட்டி பிங்கர் போஸ்டில் உள்ள தெரஸா பள்ளி: ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் தனியார் உயர் நிலைப் பள்ளி [St Theresa’s High school] உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பாதிரியார் விக்டர் (வயது 45) பணியாற்றி வருகிறார்.  கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடந்தது.

Ooty pastor victor arrested 2013

மாணவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த பாதிரி: தனது தோழியை பார்ப்பதற்காக 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு வந்தார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் விக்டர் அந்த மாணவியை தனது அறைக்கு அழைத்தார். தலைமை ஆசிரியர் அழைக்கிறாரே என நினைத்த அந்த மாணவியும் அவரது அறைக்குச் சென்றார். அங்கு மாணவியிடம் நைசாக பேசிக்கொண்டிருந்த பாதிரியார் திடீரென்று மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு சில்மிஷம் செய்தார்[14]. மாணவி அதிர்ச்சி அடைந்து பாதிரியாரின் பிடியிலிருந்து தப்பி வெளியே வந்தார்.

Sexy christianity - pastor sex India.2

முதலில் தயங்கிய மாணவி பிறகு பெற்றோர்களிடம் நடந்ததைச் சொன்னாள்: தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்து விட்டார். இருப்பினும் அவரது மனது கேட்கவில்லை. நேற்று பள்ளிக்கு வந்த அவர் மற்ற மாணவிகளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். மாணவிகள் ஆத்திரமடைந்து தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் பெற்றோரும் மற்றும் பொதுமக்களும் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை செய்தனர்.

பி.பி.ஜாப் நடத்தி வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் காப்பங்களிலும் அத்தகைய புகார்கள் வந்துள்ளன. Job with girls

 

 

மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்தது: மாணவியிடம் சில்மிஷம் செய்த விவகாரம் வெளியானதும் பாதிரியார் விக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாணவியின் வீட்டுக்கு சென்று தான் செய்த தவறுக்கு பிராயசித்தம் கோரி மன்னிப்பு கேட்டிருக்கிறார். ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர். மன்னிப்பு கேட்டால் கற்பு திரும்ப வந்து விடுமா என்று முன்னமே இட்டுள்ளா பதிவைப் பார்க்கவும், இங்குதான் அந்த கிருத்துவ இறையிலின் வக்கிரம் வெளிப்படுகின்றது. பெற்றோரும் தங்கள் மதத்திற்குக் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்றுதான் அவ்வாறு புகார் கொடுக்க மறுக்கின்றனர். இது கிருத்துவ பாலியல் குற்றங்கள் பெருகத்தான் வழி செய்கின்றன.

Catholic sex fugitivesஇவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்ட பிஷப்புகள் – இதில் ஊட்டி பிஷப்பும் அடக்கம்!

 

போலீஸார்  வந்தது,  கைது  செய்தது: போராட்டம் பற்றி அறிந்த ஊட்டி டவுன் டி.எஸ்.பி. அனிதா, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்த அவர்கள் பாதிரியார் விக்டரை விசாரணைக்காக ஊட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஊட்டி தாலுகா செயலாளர் வினோத் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் பாதிரியார் விக்டரை கைது செய்தனர். ஊட்டியில் பள்ளி மாணவியிடம் தலைமை ஆசிரியரே செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  தற்போது ஊட்டி கிளை சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

 

வேதபிரகாஷ்

21-04-2013


இந்த செக்ஸ் பாதிரியால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து!

மார்ச் 6, 2013

இந்த செக்ஸ் பாதிரியால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து!

ஜோஸப் ஜெயபாலால் கற்பழிக்கப்பட்டப் பெண்ணின் சார்பில் வாதாடும் ஜெப்ரி ஆன்டெர்ஸன் என்ற வழக்கறிஞர் கூறுவதாவது, “இந்த செக்ஸ் பாதிரியால் இந்தியாவில் உள்ள குழந்தைகளுக்கு ஆபத்து! அந்த குற்றவாளி இன்னும் சுறுசுறுப்பாக இருந்து  40 பள்ளிக்கூடங்களுக்கு நிர்வாகியாக வேறு உள்ளான். அந்த பிள்ளைகளுக்காக  நாங்கள் அஞ்சுகிறோம்“, என்று எச்சரித்துள்ளார்.

விவரங்களுக்கு கீழ்கண்டவற்றைப் படிக்கவும்:

14 / 16 வயது கன்னியை கற்பழித்ததை, குழந்தையைக் கற்பழித்ததாக செய்திகளைப் போடுகிறார்கள், ஏன்?

இரண்டு இளம்பெண்களைக் கற்பழித்த கத்தோலிக்கக் கிருத்துவப் பாதிரி கைது –ஊட்டியில் உல்லாசமாக மறைந்து வாழ்ந்தவன், ஈரோட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறானாம்!

இன்னுமொரு காமக் கிருத்துவ பாதிரி தப்பி ஓட்டம்!

 

 

போப் ஏன் பதவி விலகினார் – வாடிகனில் நடக்கும் விவகாரங்கள் என்ன – அவற்றை வாடிகன் ஏன் மறைக்கின்றது?

பிப்ரவரி 28, 2013

போப் ஏன் பதவி விலகினார் – வாடிகனில் நடக்கும் விவகாரங்கள் என்ன – அவற்றை வாடிகன் ஏன் மறைக்கின்றது?

sexy-pope-john-paul-2

sexy-pope-john-paul-2

600 ஆண்டுகளில் முதன் முறையாக போப் தானாக பதவி விலகுகிறார்: இது ஏதோ பெரிய விஷயம் போல இந்திய ஊடகளில் செய்திகள் இப்படி வெளிவர ஆரம்பித்துள்ளன. வாடினனைப் பற்றி, போப்பைப் பற்றி, கார்டினல்களைப் பற்றி, வாடிகன் அரசாங்கத்தைப் பற்றி ஒன்றும் அறியாத இந்தியர்கள் – ஊடக ரசிகர்களாக ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறர்கள். ஆனால் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் போப் “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்களால் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளன[1]. அத்தகைய “மனம் மற்றும் உடம்பு” முதலியவற்றின் அசௌகரியங்கள் என்னவென்றும் விளக்கியுள்ளன, அதாவது 2005ல் அவர் பதவிக்கு வந்ததிலிருந்து, செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்கள், பிஷப்புகள், மதகுருமார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மறைத்து விட்டார் என்று குற்றாஞ்சாட்டப்பட்டுள்ளார்[2]. 200க்கும் மேற்பட்ட செவிட்டு சிறுவர்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஈடுபடுத்திய ஒரு அமெரிக்க பாதிரியை பாதுகாத்ததாக கார்டினெல் ரெட்சிங்கர் அல்லது போப் பெனிடிக்ட் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்[3]. ஆனால், நம்மவர்கள் கண்டுகொள்ளவில்லை அல்லது அமுக்கிவிட்டார்கள். முழு விவரங்கள்-வீடியோ முதலியவற்றை இங்கே காணவும்[4].

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்

ஆட்டத்தை.ரசிக்கும்.போப்

இந்திய ஊடகங்களின் ஜனரஞ்சகமான செய்திகள்: போப் பதவி விலகுகிறார், விலகி விட்டார், இன்னொரு போப் தேர்ந்தெடுக்கப்படுவார், தேர்தெடுக்கப்படுகிறார் என்றுதான் இந்திய ஊடகங்களில் செய்திகள் ஜனரஞ்சகமாக, விசேசமாக, விசேசிக்கப்பட்டதாக, நம்பிக்கையாளர்களுக்கு அள்ளித்தரும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. மக்களும், குறிப்பாக படித்த மேல்தட்டுக்காரர்களும் ஜாலியாக பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னணி என்ன, கடந்த ஒரு-இருவாரங்களில் என்ன நடந்தது என்பதனை எந்த துப்பறியும் செய்தியாளரும், நாணயமான நிருபரும் கன்னியமான ஆசிரியரும் எடுத்துக் காட்டவில்லை. நித்யானந்தாவை துருவி-துருவி கேள்வி கேட்ட நிருபர்கள், வீடியோ எடுத்த வித்தகர்கள், தருமபுர ஆதினத்தையும் தூஷித்தவர்கள் ஏன் இப்படி கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமையாக, மனம் இருந்தும் சிந்தனையற்றவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று கர்த்தருக்குத்தான் தெரியும் போலிருக்கிறது!

Gay and Lesbian priests

பாலியல் வன்முறை – செக்ஸ் விவகாரங்களில் நாறிப்போன வாடிகன்: ஆனால், உண்மையில் கத்தோலிக்கச் சர்ச் செக்ஸ் விஷயத்தில் நிரம்பவும் ஆடிபோயுள்ளது. உலகமுழுவதும், குறிப்பாக கார்டினல்கள், பிஷப்புகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள், மடலாயக் காப்பாளர்கள் என்று பொறுப்புள்ளவர்களே பற்பல கன்னியாஸ்தீரிக்களை, பெண்களை, சிறுவர்-சிறுமியர்களை பாலியன் வன்புணர்ச்சி, கற்பழிப்பு, பலமுறை புணர்தல், பலர் புணர்தல் என்று ஏகப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு பாவமூட்டைகளின் பாரம் தாங்காமல் கர்த்தரே காப்பாற்ற முடியாத நிலையில் போய் விட்டது. இதனால் அத்தகைய பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக, ஒரு கூட்டத்தார் வியாழக்கிழமை (28-02-2013), போப்பிடம், “தாங்கள் விலகுவதற்கு முன்னர், அத்தகைய பிஷப்புகளை பாதிரிகளை மற்றும் அவர்களை பாதுகாத்து வரும் அதிகாரிகளை களையடுக்குமாறு” முறையிட்டுள்ளனர்[5].

Vatican sex

போப்பை தேர்ந்தெடுக்க வேண்டியவரே செக்ஸ் விவகாரத்தால் பதவி விலகியது: சர்ச்சுகளின் செக்ஸ் விவகாரம் எந்த அளவிற்கு போய் விட்டதென்றால், கார்டினல் கேய்த் ஓபிரியன் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர், தன்னுடைய்ச் செக்ஸ் காமக்களியாட்டங்களினால் எடின்பர்க்கின் ஆர்ச்பிஷப் பதவிலிருந்து 25-02-2013 அன்று விலக நேர்ந்து,  அவர் புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் தகுதியையும் இழந்தபோது, பெரிய விவகாரமாகி விட்டது[6]. இதனால், கார்டினல்களின் ஒழுக்கத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படுகிறது. இது ஒரு உதாரணம் தான். இதைப் பற்றி ஏற்கெனவே செய்துள்ள பல பதிவுகளை இதே இணைதளத்தில் பார்க்கவும் – http://www.christianityindia.wordpress.com

Cardinal  Keith OBrien involved in sex

செக்ஸ்-குற்றங்களில் ஈடுபட்ட கார்டினல்களைப் பற்றி விசாரிக்க மூன்று கார்டினல்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது[7]: கார்டினல்கள் என்பவர்கள் கத்தோலிக்க சர்ச்சுகளில் பெரிய தலைமைப் பதவியில் இருப்பவர்கள். இவர்கள் தாம் கூடி, தமக்குள் ஒருவரை போப்பாகத் தேர்ந்தெடுப்பர். அத்தகைய தேர்ந்தெடுப்பு விவகாரம் மிகவும் ரகசியமாக இருக்கும். அத்தைகைய தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சிகள் எப்படியிருக்கும் என்று பல ஹாலிவுட் படங்கள் தத்ரூபமாகக் காட்டியுள்ளன[8]. ஆகையால், மூன்று கார்டினெல்களின் காமலீலைகள் பற்றி விஷயங்கள் வெளிவந்ததுடன், வாடிகன் வழக்கம் போல அதனை அமுக்கிவிடப் பார்த்தது. ஆனால், எப்படியோ அக்கடிதம் வெளியே கசிந்து விட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களே அல்லது அதற்குத் துணை போனவர்களே விசாரிக்கும் போது என்ன நியாயம், நீதி கிடைக்கும், எதிர்பார்க்க முடியும்?

Vatican sex  Pope resignation 2013

“வாடிலீக்” – வாடிகன் கசிவு என்றால் என்ன?: “வாடிகன்லீக்” – வாடிகனில் கசிவு – அதாவது பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அவற்றில் இருந்தன. அவையாவும், குருமார்களின் கடித போக்குவரத்திலிருந்தே பெறப்பட்டதாகும்[9]. குறிப்பாக காபிரியல் என்பவர் “திருட்டுக் குற்றத்திற்காக” வாடிகன் போலீஸரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[10]. வாடிகனில் எல்லாமே போப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், எவ்விதத்தில் இக்குற்றங்கள் உண்மையாக விசாரிக்கப்படும், உண்மைகள் வெளிவரும், குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்விகளை எழுப்பி, கடிதங்களையும் போப்பிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வழக்கம் போல ஆடிகன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் கூறியுள்ளார்கள்[11].

காப்ரியல் யார் – அவன் என்னத்தான் அப்படி குற்ரம் செய்துவிட்டான்?: காப்ரியல் ஒரு பட்லெர் (butler) அதாவது வேலைக்காரன், அவன், வாடிகன் பணமோசடி, எமாற்றுவேலை, துரோகம், கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் மீறல்கள், செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றில் குருமார்கள் ஈடுபட்டுள்ளது மற்றும் அவற்றை மறைக்க போப்பே உதவியாக இருந்திருக்கிறார் அல்லது மெத்தனமாக இருந்தார் போன்ற விவரங்கள் அடங்கிய குருமார்களின் கடிதங்களை வெளியே புழக்கத்தில் விட்டதால், கடந்த அக்டோபர் 2012லிருந்து ஒன்றரை ஆண்டு சிறைவாசத் தண்டனைக் கொடுக்கப் பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளான்[12]. புனித பரிசுத்த ஆவியின் தூதனாக இருந்து தான் வாடிகனில் இருக்கும் தீய சக்திகள், ஊழல் முதலியன எங்கும் இருப்பதைக் கண்டு அவற்றை கசியவிட்டதால் அத்தண்டனை அளிப்பதாக, விசாரித்த நீதிபதி 20 பக்கங்களில் விளக்கமும் அளித்துள்ளார்[13].

வாடிகன் வங்கியின் ஊழலுக்கும், உலக பொருளாதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?: 2011 ஆண்டில் வாடிகன் வங்கிற்கு 19 மில்லியன் டாலர்கள் அல்லது சுமார் ரூ.100 கோடி [$19 million (15 million euros) in 2011] நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் உலக வர்த்தக மார்கெட் சரிவுதானாம்[14]. அப்படியென்றால், வாடிகன் என்ன வியாபாரம் செய்கிறது, எப்படி பணத்தைப் பெறுகிறது? பிறகு வாடிகன் வங்கியில் ஏன் ஊழல் நடக்கிறது, கார்டினல்கள், பிஷப்புகள் கையாடல்கள் செய்கிறார்கள், மாட்டிக் கொள்கிறார்கள் ஆனால் விஷயங்கள் மறைக்கப்படுகின்றன? இப்பொழுது கிருத்துவர்கள் இந்திய அரசாங்கத்தில் பிகப் பெரிய பதவிகளில் உள்ளதால் அவர்கள் இந்தியர்களாக இந்திய நலன்களுக்காக வேலை செய்வார்களா அல்லது சிவுவாசமிக்க கிருத்துவர்களாக, சோனியா மெய்னோ தலைமையில் வாடிகனுக்கு சாதகமாக வேலை செய்வார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

vatican-bank-scandal

© வேதபிரகாஷ்

28-02-2013


[1] Citing failing strength of “mind and body,” Pope Benedict XVI stunned his closest aides and more than 1 billion Catholics by resigning on Monday, becoming the first pope to do so in nearly 600 years and ending the tenure of a formidable theologian who preached a gospel of conservative faith to a fast-changing world.

http://articles.washingtonpost.com/2013-02-11/national/37027069_1_georg-ratzinger-paolo-gabriele-pope-benedict-xvi

[2] The Vatican is confronting what observers describe as its gravest test in years, with officials fending off allegations that Pope Benedict XVI mismanaged abuse cases that occurred years before he ascended to the papacy in 2005. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/03/25/AR2010032500477.html

[3] Yet the scope of the abuse cases emerging in Europe and new allegations this week that a Vatican office led by Benedict — then known as Cardinal Joseph Ratzinger — failed to defrock an American priest who had allegedly molested as many as 200 deaf boys have again shed a spotlight on Vatican secrecy over such sensitive issues as church finances and abuse cases.

[5] A leading support group for victims of clerical sexual abuse also made what it called a “last-ditch plea” to Pope Benedict to use his authority before resigning on Thursday to discipline bishops who have protected predatory priests in their dioceses.

http://www.reuters.com/article/2013/02/26/us-pope-resignation-abuse-idUSBRE91P0P820130226

[6] The abuse issue took on new urgency after Scotland’s Cardinal Keith O’Brien, accused of improper behavior with young priests, quit as Edinburgh archbishop on Monday and pulled out of the Sistine Chapel conclave to elect a new pope.

[7] The officials also commented on Benedict’s meeting that morning with three cardinals he had appointed to investigate a papal letter-leaking scandal that cast a shadow over his last year in office. The probe into the “VatiLeaks­” affair has prompted months of speculation, including thinly sourced recent reports in the Italian media claiming that the trio discovered a faction of gay Vatican priests who were being blackmailed by laymen with whom they had had “worldly” relations.

[8] டான் பரௌனின் “ஏஞ்செல்ஸ் அண்ட் டெமென்ஸ்” படத்திலும் காணலாம். அதில் பங்குக் கொள்ளும் கார்டினெல்கள் எப்படி புகைப் பிடித்துக் கொண்டு, மது அருந்தி கொண்டு………………….வருகிறார்கள், இருக்கிறார்கள்………………முதலிய விவகாரங்கள் எடுத்துக் காட்டப் படுகின்றன.

[9] VatiLeaks, as the scandal came to be known, dragged the fusty institution into the wild WikiLeaks era. It exposed the church bureaucracy’s entrenched opposition to Benedict’s fledgling effort to carve out a legacy as a reformer against the backdrop of a global child sex abuse scandal and the continued dwindling of his flock.

http://articles.washingtonpost.com/2013-02-16/world/37131414_1_benedict-xvi-vatican-insiders-vatican-city

[10] Gabriele has been charged with “aggravated theft” and is now held in custody by the Vatican police.

http://articles.washingtonpost.com/2012-05-29/national/35458342_1_vatican-archbishop-angelo-becciu-paolo-gabriele

[11] Despite Gabriele’s arrest, Lombardi said that a cardinals’ commission appointed by Benedict to investigate the leaks is still working on the case, with the authority to “hear anyone they think might have information in this case.”

http://articles.washingtonpost.com/2012-05-29/national/35458342_1_vatican-archbishop-angelo-becciu-paolo-gabriele

[13] According to a 20-page indictment issued by a Vatican judge, the former butler told prosecutors that he started the leaks because he was convinced that “evil and corruption” were “everywhere” in the church, and that he acted as an “infiltrator” of the Holy Spirit.

[14] The Vatican posted a record loss of $19 million (15 million euros) in 2011, its worst deficit in more than a decade. Vatican officials blamed the loss on the “negative trend of global financial markets, which made it impossible to achieve the goals laid down in the budget,” in an announcement on Thursday (July 5, 2012).

http://articles.washingtonpost.com/2012-07-09/national/35486567_1_vatican-city-vatican-bank-vatican-radio

சென்னையில் பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்த ஆந்திர பெண் என்ஜினியரை மதம் மாற்ற முயற்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்றோர் புகார்!

நவம்பர் 6, 2012

சென்னையில்  பிரபல  கம்ப்யூட்டர்  நிறுவனத்தில்  வேலை  பார்த்த  ஆந்திர  பெண்  என்ஜினியரை  மதம்  மாற்ற  முயற்சி  போலீஸ்  கமிஷனர்  அலுவலகத்தில்  பெற்றோர் புகார்!

Hindu girl forcefully converted

Hindu girl forcefully converted

Forced conversion alleged (Deccan Herald, Hyderabad)“How can they separate a child from her mother just because she happens to be above 18 years? I heard that they are going to shift her to some undisclosed location after two years, in which case we won’t even be able to see her,” says the mother of Laxmi Priya, the 26-year-old who was a software engineer at Infosys in Chennai before she joined the Pentecostal Mission Church there as a full time missionary in July last year.Laxmi’s parents — her father Vardarajulu is a goldsmith from Secunderabad —approached the State Human Rights Commission on Tuesday alleging that their daughter was brainwashed and forcibly converted by a Christian mission in Chennai and is currently in their custody. Mr Vardarajulu is worried about her health, since he says she has been made to fast and pray for days together.According to the parents, Laxmi left them all of a sudden following a phone call. Her marriage had been settled at the time. She joined the Pentecostal Mission Church, Tambaram, in Chennai, and hasn’t been allowed to visit her parents. “She said she was baptised by the Pentecostal Mission Church and embraced Christianity of her free will and she insists we don’t intervene and allow her to practice the same,” her father said.

In their petition before the Commission, the parents said: “After perusal of her letters and telephonic conversation, medical experts are saying she is going through serious mental disorder and it would lead to total breakdown if there was no timely medical intervention. Her life would be futile and would be of no use to her, family, or to the mission if she isn’t treated in time.” Her father claims Laxmi is suffering from hallucinations and delusions. “She says she is conversing with Jesus and is married to Christ. I went to her and stayed for four days. We were not allowed private audience with her.”

இப்படி சமீபத்தில் செய்தி வந்துள்ளது. ஆனால், இதன் பின்னணியில், பெரிய சதியே உள்லது தெரிய வருகிறது.

 பல்முனைத்தாக்குதல்களில் கிருத்துவ மிஷினரிகள்: கிருத்துவர்களின் மதமாற்றச் செயல்கள் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களிடத்திலேயே நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கும்போது, கிருத்துவர்கள் எந்த அளவிற்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது[1]. படித்தவர்-படிக்காதவர் என்ற வித்தியாசம் இல்லாமல், அமோகமாக மதமாற்றம் என்ற வியாபாரத்தைச் செய்து வருகின்றனர்[2].

 

  • Ø  வளர்ந்து வரும் தொழிற்நுட்பத்தை மதமாற்றத்திற்கு உபயோகிப்பது எப்படி[3]
  • Ø  கணினி மூலம் மதம் மாற்றுவது எப்படி[4],
  • Ø  செல்போன் மூலம் மதம் மாற்றுவது எப்படி[5],
  • Ø  “செல்போன் மூலம் சீடர்தகுதி”[6],
  • Ø  சேராத மக்களிடம் எப்படி போய் சேருவது[7],
  • Ø  வெகுதூரத்தில் உள்ளவர்களை அடைவது எப்படி[8]
  • Ø  வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள பில்லியன் மக்களை மதமாற்றிவது எப்படி[9]
  • Ø  சிறிய பட்ஜெட்டில் வெப்சைட் தொடங்கி வேலை செய்ய ஆரம்பிப்பது எப்படி[10]

 

இப்படிபட்டத் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன! ஆண்கள் பெண்களிடம் எப்படி பேசி கவருவது, பெண்கள் ஆண்களிடம் எப்படி பேசி கவருவது, என்றெல்லாம் நடைமுறையில் பயிற்சிகள் அளிக்கப்ப்படுகின்றன! அப்பயிற்சிகளிலேயே ஊக்கமடையும் விசுவாசிகள் தீவிரமாகவே வேலைகளில் இறங்குகிறார்கள். ஆஸ்பத்திரி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் முதலியவற்றில் எப்படி மதமாற்றத்திற்கு ஆட்களை கவருவது, அவர்களுக்கு என்ன தேவை என்று கண்டு பிடித்துக் கொடுப்பது, மேலும் கொடுப்பதாக ஆசைக் காட்டுவது, முடிவில் “வா, ஏசுவை ஏற்றுக் கொள்” என்று வற்புறுத்துவது என்று தொழில் நடந்து வருகிறது.

 

மீன் பிடிக்க மீனை போடுவது: 21வது நூற்றாண்டில் இதை சாதிப்பது எப்படி[11]– என்று பற்பல கட்டுரைகள், விவரங்கள், திட்டங்கள். மதமாற்றுவதற்கு எத்தகைய வழியையும் கையாளலாம், ஏனெனொல் அது மிகவும் புண்ணியமான காரியம். கர்த்தர் / தேவன் / ஏசு அந்த காரியத்தினால், சொர்க்கவாசலை திறந்து வைத்துள்ளார் என்றெல்லாம் மூளைசலவை செய்யப் பட்டு பேண் விசுவாசிகளை அந்நிய-முதலீட்டு கம்பெனிகளில் நுழைத்துள்ளனர்[12]. குழந்தைகள், பெண்கள், அந்தந்த நாட்டு மக்கள் என்று யாரையும் விட்டு வைப்பதாக இல்லை[13]. இதற்காக கோடிகள் செலவழிக்கப் பட்டு, மாநாடுகள் நடத்தப்படுகின்றன, புத்தகங்கள் வெளியிடப் பட்டுள்ளன, ஏன் அதற்கென ஆராய்ச்சி நிறுவனங்களே வேலை செய்கின்றன.

 

பி.பி.ஓ வேலை – இந்தியபெண்களைக் கெடுப்பதற்காகவே: பி.பி.ஓ. வேலை என்று ஆசைக் காட்டி, ஆயிரக்கணக்கான இந்திய பெண்களை வேலைகளில் அமர்த்தியுள்ளார்கள். அவர்கள் அமெரிக்க அல்லது ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப அவர்கள் நேரங்களில் விழித்திருந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், இதை உபயோகப் படுத்திக் கொண்டு, கிருத்துவ முதலாளிகள், உயர்-அதிகாரிகள், ஏஜென்டுகள் முதலியோர் அவர்களைக் கற்பழிப்பது, கொலை செய்வது என்று ஈடுபட்டு வருகிறார்கள். இவற்றைப் பற்றி ஏராளமான செய்திகள் வந்துள்ளன. ஆனால், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஏனெனில் ஊடகங்கள் அவற்றைப் பற்றி செய்திகளை வெளியிடுவதில்லை. பி.பி.ஓ. வேலைகளில்தான் இந்து பெண்களின் பெயர்களை கிருத்துவப் பெயர்களாக்கி, வேலை வாங்குகிறார்கள் என்றால், இங்கு அவர்களை மதம் மாற்றவே செய்கிறார்கள் என்று தெரிகிறது. “சைபர் எவாஞ்சிலிஸம்” என்று சில ஆண்டுகளுக்கு முன்னமே, ஒரு கட்டுரையில், இதைப் பற்றி எடுத்துக் காட்டியிருந்தேன்[14]. இப்பொழுது சென்னையிலேயே அது நடந்தேறியுள்ளது. ஆகவே, பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

 

மதம் மாற்ற முயற்சிபரபரப்பு புகார்: ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் வரதராஜுலு. இவர் தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி அமிர்தா பாய். இவர்களது மகள் வலுக்கட்டாயமாக மூளைச்சலவை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளாள் என்றறிந்த இவர்கள் முதலில் ஆந்திர மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்தனர். இருப்பினும், குறிப்பிட்ட பெந்தகோஸ்தே மிஷன்[15], இரும்புலியூர், தாம்பரம், சென்னையில் இருப்பதனால், சென்னைக்குச் சென்று, போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தப் பட்டனர். அதன்படியே, அவரது பெற்றோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்[16]. இவர்கள் இருவரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாம்பரத்தில் தங்கி வேலைப் பார்த்த சாப்ட்வேர் இஞ்சினியர்: “எங்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன்  உள்ளார். இதில், 2 மகள்களுக்கும், ஒருமகனுக்கும் திருமணமாகி விட்டது. எங்களுடைய கடைசி மகள்  லட்சுமிபிரியா (வயது 27). எங்கள் குடும்பத்தில் அதிகம் படித்தது  இவள்தான்ஐதராபாத்தில்  உள்ள  என்ஜினீயரிங்  கல்லூரியில்  பி..  படிக்க  வைத்தோம்.  கல்லூரியில்  படிக்கும்  போதே  அவளுக்கு  சென்னையில்  உள்ள  பிரபல  இன்போசிஸ்  சாப்ட்வேர்  கம்பெனியில்  கைநிறைய  சம்பளத்துடன்  வேலை  கிடைத்தது [17].  பின்னர்,  கடந்த 2007-ம் ஆண்டு  முதல்   2009-ம்  ஆண்டு வரை  தாம்பரத்தில்  வீடு  எடுத்து  தங்கி,  வேலைக்கு  சென்று  வந்தாள்.  அப்போது,  அவளுடன்  வேலை  பார்த்த  விஜி  என்ற  பெண்ணும்  அங்கு  தங்கினார்”.

கட்டாய மதமாற்றத்திற்கு முயற்சி: “எங்களது  மகளை  விஜி,  தாம்பரம்  அருகே  இரும்புலியூரில்  உள்ள  கிறிஸ்தவ  தேவாலயத்திற்கு  அழைத்து  சென்றுள்ளார்.  அங்கு  எனது  மகளை  கட்டாய  மதமாற்றம்  செய்ய  முயன்றனர்.  கடந்த  ஒரு ஆண்டுக்கு மேலாக எங்கள் மகள் எங்களுடன் தொடர்பில் இல்லை.  நேரில்  சந்திக்க  முயன்றாலும்  தேவாலய  நிர்வாகிகள் தடுக்கின்றனர்”. [விஜி என்பவள் கிருத்துவப் பெண், அதனால் ரூமில் இருக்கும் போது, அடிக்கடி  வற்புறுத்தி சர்ச்சிற்கு வருமாறு பணித்திருக்கிறாள். லட்சுமியின் மென்மையான போக்கைக் கண்டு, அவளை எளிதில் மதமாற்றம் செய்து விடலாம் என்று செயல் பட்டிருக்கிறாள்]

மகளை மீட்டுத்தர கோரிக்கை: “எங்களது மகளுக்கு ஐதராபாத்திற்கு பணிமாறுதல் கிடைத்தது. ஆனால்,  கடந்த ஆண்டு ஜுன்மாதம் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டாள். ஜூலையில்  பெந்தகோஸ்த்மிஷனில் (the Pentecostal Mission Church) சேந்ததாகத் தெரிகிறது.  அதன்பின்னர், தொடர்ந்து  தேவாலயத்திலேயே தங்கி இருக்கிறாள். அவளை கன்னியாஸ்திரியாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.  எனவே, எங்களுடைய மகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்”, இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். [18 வயது ஆகிவிட்டதால், பெண் தனதிச்சைக்கு ஏற்றபடி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சர்ச் தரப்பில் வாதிட்டுள்ளனர். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக தங்களுக்குத் தெரியாமல் தங்கள் மகளை வைத்துள்ளனர் என்றும் புகாரில் சொல்லப்பட்டுள்ளது[18]].

வேதபிரகாஷ்

05-11-2012


[3] Training Methodologies Mindmap – how technology can be used in training, with input from MAF Learning technologies and Cybermissions , it is a large PDF diagram, just scroll around within it to view it all.

[7] Internet Evangelism And The Unreached (PowerPoint: Call2All Los Angeles Global Congress 2011 presentation)

[8] Training In Remote Areas and Mobile Ministry In Remote Areas (PowerPoints from Mobile Ministry Forum 2011)

[9] The Next Billion (2011 update) – how to reach the next billion people to arrive on the Internet, mainly from the developing world.

[10] Starting On A Shoe-String  How to get started in Internet Ministry on a very small budget and still be highly effective for the Lord. Tips on planning, designing and marketing your website, things to do and to avoid, and help with funding. PowerPoint format.

[12] How To Evangelize The World From Your Computer (PowerPoint from CMTA 2012)

Mobile Ministry – a PowerPoint on mobile ministry, its vast potential and how to get started in it (pptx format) CMTA 2012

Mobile Discipleship PowerPoint (contains many more slides than the video above) How to deliver theological education and discipleship materials to, and via, mobile devices.

Video: Mobile Ministry – Issues With Implementation – things you need to think about hen you devise a mobile strategy (high quality, large format)

From Information To Transformation (updated Oct 2011)– how Internet ministry can become transformational (pptx format)

[15] http://en.wikipedia.org/wiki/The_Pentecostal_Mission

The Pentecostal Mission (TPM) or New Testament Church (NTC) formerly known as Ceylon Pentecostal Mission (CPM), is a pentecostal denomination which originated in Ceylon, now Sri Lanka. The international headquarters is now situated in ChennaiTamil NaduIndia. It has around 2,500,000 members worldwide over 65 nations. This mission was founded in Colombo, Sri Lanka in 1923 by a Hindu convert, Ramankutty – later known as Pastor Paul.[1][2] It now has churches (or Faith Homes) in many parts of Sri Lanka, as well as India, Nepal, Malaysia, Singapore, Hong Kong, Australia, New Zealand, Canada, USA, Europe, Africa, the Caribbean Islands and the Middle East.

[17] http://dsceiem.com/2011/02/placement-of-batch-2007-2011/

இந்த பெண்மணியும், சர்ச்சையில் அகப்பட்டுள்ள பெண்மணியும் ஒன்றா என்று தெரியவில்லை.

[18] “How can they separate a child from her mother just because she happens to be above 18 years? I heard that they are going to shift her to some undisclosed location after two years, in which case we won’t even be able to see her,” says the mother of Laxmi Priya, the 26-year-old who was a software engineer at Infosys in Chennai before she joined the Pentecostal Mission Church there as a full time missionary in July last year.

http://article.wn.com/view/2012/03/06/Forced_conversion_alleged/

கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?

ஒக்ரோபர் 24, 2012

கிருத்துவர்களுக்கு திருவரங்கத்தில் என்ன வேலை?

“திராவிடர்கள்” என்று சொல்லிக் கொண்டு, “பெரியார்” பெயரை உபயோகப்படுத்திக் கொண்டு, வைகோக் கட்சிக் கொடியை தலைகீழாக வைத்துக் கொண்டு கலாட்டா செய்யும் வேலையில், இந்து சாமியார் போல அல்லது நித்யானந்தா போல, தெய்வநாயகம் என்ற குழப்பவாதி, கிருத்துவ வெறியன், இந்த குட்டையில் மீன் பிடிக்க வந்துள்ளது வியப்பாக உள்ளது. “பிரமணாள் கபே இப்பொழுது திறக்கப்பட்டிருப்பது ஏன்?” என்ற தலைப்பில் ஆறுப்பக்க வண்ண பிட்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளார். இப்படி தருணம் வரும் என்று முன்னமே அச்சிட்டு தயாராக வைத்திருக்கிறார் போலும்! கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள், பாஸ்டர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாஸ்திரீக்களையும், சிறுமிகள், சிறுவர்களை பாலியல் ரீதியில், வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி, குரூரமாக கொடுமைப் படுத்தி வரும் வேளையில், அவர்களை விடுத்து இந்த ஆல் எதற்கு ஸ்ரீரங்கத்தில் சுற்றி வர வேண்டும்? அந்த பிட்நோட்டீஸைப் படித்துப் பார்த்தால், அந்த “தாமஸ் கட்டுக்கதை”யை விட படு அபத்தமாக இருக்கிறது. “தமிழ்” பெயரை வைத்துக் கொண்டு இந்த ஆள் செய்யும் கலாட்டாவில் பல இந்துக்களும் ஏமாந்துள்ளனர்[1]. நக்கிரனின் “மாட்டிறைச்சி மாமி நான்” என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிகிறது[2].

வேதபிரகாஷ்

24-10-2012


[1] “உடையும் இந்தியா” என்ற புத்தகத்தில் தேவையில்லாமல், இந்த ஆளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்துக்கள் எழுதியிருப்பது ஒரு தகவல். அது மட்டுமல்லாது, முன்பு, தருமபுர ஆதீனத்தில் இந்த ஆளுக்கு கூட்டத்தை நடத்தி, அதில் இவர் சொன்னதெல்லாம் தவறு என்று எடுத்துக் காட்டியப்பிறகுக் கூட, அருணை வடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிய பிறகும் கூட, சில சைவர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.

[2]முதலமைச்சர் ஜெயலலிதா, மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று ‘நக்கீரன்’ இதழில் வெளியான செய்திக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘நக்கீரனுக்கு’ எதிராக ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தத் தாக்குதல் ‘நக்கீரனுக்கு’ எதிரானதாக மட்டும் நாம் கருதவில்லை. ‘மாட்டுக்கறி’ சாப்பிடும் கோடானுகோடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது.

http://www.periyarthalam.com/2012/01/13/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முதலியன.

ஜூலை 18, 2012

பாதிரிகளின் தொடர்ச்சியான செக்ஸ் தொல்லை: சிறுவர்-சிறுமியர்களை வன்புணர்தல், ஓரின புணர்ச்சி முதலியன.

 நாளுக்கு நாள், மாதத்திற்கு மாதம் இப்படி கிருத்துவ செக்ஸ்-குற்றங்கள் அதிகரித்து வருவது[1], அவர்களே அவற்றை ஊக்குவிக்கிறார்களா அல்லது இந்திய சமூகத்தை மறைமுகமாக சீரழிக்கிறார்களா என்ற சந்தேகம் வலுப்படுகிறது. போர்ச்சுகீசியர்கள் இத்தகைய செக்சஸ்-குற்றங்களை கோவா, கொச்சி முதலிய இடங்களில் செய்தார்கள். இப்பொழுதும்,  அதே மாதிரி காணப்படுகிறது[2]. அனாதை / கருணை இல்லங்கள் இவர்களது காமத்தை பூர்த்தி செய்கின்றன[3]. வாடிகன் நடவக்கை எடுக்காமல் மறைப்பது, தயங்குவது முதலிய காரியங்கள் இவர்களுக்கு ஊக்குவிப்பதும், மிகத்தவறான முன்னுதாரணமாகிறது[4]. எந்த குற்றங்கள் புரிந்தாலும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியும் வெளிப்படுகிறது[5]. செக்ஸில் பங்கு கேட்டு வேறு அடித்துக் கொள்ளும் கேவலமும் உள்ளது[6]. படுகொலை-குரூரக் கொலை செய்த பெண் கூட ஏசுவின் பெயரால் தான் குற்றமற்றவள் என்று சொல்லிக் கொள்கிறாள்[7]. திருச்சி புளோரன்ஸ் மேரி வழக்கும்[8] பற்பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது[9]. இது தமிழக, தென்னிந்திய பிரச்சினை[10] என்றில்லாமல், இந்திய ஏன் உலகப் பிரச்சினையாக உள்ளது. பாதிரிகள் மர்மமான முறையில் இறப்பது[11], கொலை செய்யப்படுவது முதலியனவும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

 ஒரிசாவில் ஒரு கன்னியாஸ்திரி கற்பழிக்கப்படாமலேயே, கற்பழிக்கப்பட்டாள் என்று ஊலையிட்டு, உலகம்முழுவதும், ஊடகங்களில் ஒப்பாரி வைத்தார்கள். உண்மை தெரிந்ததும் அப்படியே மௌனமாகி விட்டனர். ஆனால், இப்படி லட்சக் கணக்கில் இந்தியக் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், வயதுக்கு வந்தவர்கள் மற்ற ஆண்கள்-பெண்களை இப்படி பாலியல் குற்றங்களுக்கு வற்புறுத்தி, தமது மிருகத்தனமான இச்சைகளை திர்ர்த்துக் கொள்ளும் காமுகர்களை, கயவர்களை, கபோதிகளை ஏன் இந்தியர்கள் விட்டு வைக்கிறார்கள்? ஒப்பாரி வைத்த அதே பொறுப்புள்ள கிருத்துவர்கள் இவற்றைப் பற்றி ஏன் குரலெழுப்பவதில்லை? ஒருவேளை சந்தேகப்படும் வகையில், அவர்களும் ஒத்துப் போகிறாற்களா, ஒத்துழைக்கிறார்களா, அத்தகைய இந்தியாவை சீரழிக்கும் சதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளாற்களா? இந்தியர்களுக்கு நிச்சயமாக விடைகளைச் சொல்லியாகி வேண்டும்.

 கருணை இல்லத்தில்  பாலியல் தொல்லை :  கிருஸ்தவ மதபோதகர் மகன் கைது (- ஜூலை 2012): சென்னை அருகே உள்ள அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் ஞானசேகரன். கிறிஸ்தவ மத போதகரான இவர் நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம் போலீஸ் காலனியில் வாடகை வீட்டில் ஜாய் கருணை இல்லம் என்ற பெயரில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் இல்லத்தை நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் 18 மாணவிகளும், 6 மாணவர்களும் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஜார்ஜ் ஞானசேகரனின்  மகன்  ஜானி (28). இவர் அங்குள்ள மற்றொரு வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த இல்லத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் நாமக்கல்லில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வேனில் சென்று வரும் இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் பஸ்நிலையத்தில் அழுது கொண்டு இருந்தார்.
 
ஊட்டிப் பாதிரி / தாளாளார் பாணியில் மற்ற கிருத்துவப் பாதிரிகள்: இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் அனைத்து  மகளிர் போலீசார் விரைந்து சென்று அந்த மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், சக மாணவிகளுடன் கருணை இல்லத்தில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்ததாகவும்[12], அப்போது இரவு 10 மணியளவில் அங்கு வந்த நிர்வாகியின் மகன் ஜானி தன்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அங்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்தார்[13]. மேலும் அடிக்கடி இது போல் தொல்லை கொடுப்பதால் அங்கு தங்கி படிக்க விருப்பம் இல்லாமல் வெளியே வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லலிதா வழக்குப்பதிவு செய்து ஜானியை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். எப்படி பாதிரிகள் இவ்வாறு தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை[14]. பெண்களும் எப்படி அத்தகைய பாதிரிகளிடம் படிக்கை வைக்கிறார்கள் என்றும் புரியவில்லை[15].

பாதிரகுடி ஆர்.சி பாதிரியார்-ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் 20 மாணவர்களை ஹோமோ செக்ஸ் ஓரினச் சேர்கை கொடுமை (ஆடி 7, 2010 , ஜுவி கட்டுரை): கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய, தூய வெள்ளையுடை அணிந்த ஒரு பாதிரியார், தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஹோமோ செக்ஸுக்கு கொடூரமாகத் துன்புறுத்தியதாக… அவரை தேடிக் கொண்டிருக்கிறது போலீஸ்! தஞ்சை மாவட்டம் மீமிசல் அருகே பாதிரகுடி கிராமத்தில், புனித சந்தியாகப்பர் தேவாலயம், ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, ஆர்.சி. தொடக்கப்பள்ளி, புனித மரியன்னை மருத்துவமனை மற்றும் புனித அடைக்கல அன்னை கன்னியர் இல்லம் ஆகியவை உள்ளன. பேருந்து வசதியே இல்லாத இந்த கிராமத்திலிருக்கும் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்ட சுற்று வட்டார கிராம மாணவர்கள் 600 பேர் படிக்கின்றனர். சில வருடங்களாக 100 சதவிகிதத் தேர்ச்சியைக் கொடுத்து வரும் இந்தப் பள்ளியில், இரவிலும்கூட தங்கிப் படிப்பார்களாம் மாணவர்கள். அவர்களிடம்தான் தலைமையாசிரியரான பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா வற்புறுத்தி ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார் என்று கொதிப்பு கிளம்பி, சுற்றுவட்டார கிராமத்தினர் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

ரூமுக்கு வாடா என்று அழைத்துக் கெடுக்கும் பாதிரி: பாதிரியார்மீது ‘செக்ஸ் டார்ச்சர்’ புகார் தந்திருக்கும் 10-ம் வகுப்பு மாணவன் மைதீனை சந்தித்தோம். ஒருவிதப்பதற்றத்துடன் பேச ஆரம்பித்தான். ‘பத்தாவது படிக்கறவங்க இரவுப் பள்ளிக் கூடத்திலேயே தங்கிப் படிக்கணும். ஒருநாள் நைட்டு தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி, ‘நீ ஒழுங்கா பரீட்சை எழுதி பாஸ் பண்ணணும்னா என் ரூமுக்கு வாடா’ன்னு அழைத்துச் சென்றார். உள்ளே போனதும் கதவை சாத்திக்கிட்டு, டி.வி-யில செக்ஸ் படம் போட்டார். அப்புறம் அவர் உடம்புல சென்ட் அடிச்சுகிட்டு, என்னை மோந்து பார்க்கச் சொன்னார். எனக்கு தலைசுத்துச்சு. உடனே ‘இதை குடி சரியாயிடும்’னு ஒரு கிளாஸ்ல ஏதோ ஊத்தி, வற்புறுத்திக் குடிக்க வெச்சார். நான் அரை மயக்க மானதும், என் உடம்புல இருந்த டிரஸ்ஸையெல்லாம் உருவி… (தயக்கமும் அருவருப்புமாக சொல்லி முடித்து…) மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப, என் உடம்புல அங்கங்கே பயங்கரமா வலிச்சுது. ‘யார்கிட்டயாவது சொன்னா ஃபெயிலாக்கிடுவேன்!’னு மிரட்டியே, அப்புறம் வேறு சில நாட்களிலும் ஐந்து முறை இப்படி பண்ணினார். கடைசி முறை பண்ணினப்ப என்னால வலி தாங்க முடியல. ‘இனி பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன்’னு வீட்ல அழுது, விஷயத்தைச் சொன்னேன்!’ என்றான்.

தினமும் செக்ஸுக்கு பையன்கள் வேண்டும் என்றால் பள்ளிகள் நடத்துவார்களா? மைதீனின் உறவுக்காரர் சாதிக் பாட்ஷா, ‘பாதிரியாருக்கு சொந்த ஊர், தஞ்சாவூர் பக்கத்துல புனல்வாசல் கிராமம். இவனெல்லாம் எப்படி புனிதமான பாதிரியார் தகுதியை அடைஞ்சான்? பல பெண் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்திருக்கிறான். அவமானத்துக்கு பயந்து வெளியே சொல்லலை. இவனோட இந்த ஹோமோசெக்ஸ் அராஜகம் அங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனால், வெளியே பரவினால் மதத்துக்கு அவமானம்னு நினைச்சு, அதை மறைத்து வந்துள்ளனர். ஸ்டீபனுக்கு தினமும் பையன்கள் வேண்டுமாம். இவன் அறையில் சரக்கு உட்பட எல்லாமே இருந்திருக்கிறது. ராஜ்யசபா எம்.பி-யான திருநாவுக் கரசர் ஒருகாலத்தில் படித்த இந்த பள்ளியின் பேர் இன்னிக்கு இப்படி நாறிக் கெடக்கு!’ என்றார்.

சாமியாரை தப்பா சொல்லக்கூடாது’ன்னு – அப்படியென்றால் கிருத்துவ சாமியார் ஒசத்தியா? மனித உரிமைக் கழக மாவட்டத் தலைவர் சண்முகம் மற்றும் தவ்ஹீத் ஜமா-அத்-தின் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் மஜீது ஆகியோர், ‘ஒரு பாதிரியாரான ஸ்டீபன் ராஜா செய்தவை மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம். போன வருடமே இங்கு ஹெட்மாஸ்டராக வந்துவிட்டான். அவனுடைய மிரட்டலுக்கும் அவமானத்துக்கும் பயந்து புள்ளைங்க வெளியே சொல்லலை. சில மாதங்களுக்கு முன்பு ஒன்பதாவது படிக்கும் ஒரு மாணவி, அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலைன்னு இடுப்புல உதைச்சிருக்கான். அதே போன்று பாதிரக்குடியிலேயே ஒரு பெண்ணை இவன் நாடியபோது, அந்த ஊர் இளைஞர்கள் பாதிரி யாருக்கு எதிராகக் கிளம்ப… அப்போது பாதிரக்குடி கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உட்பட்ட 51 கிராமத்தினர், ‘சாமியாரை தப்பா சொல்லக்கூடாது’ன்னு அந்த காமக் கொடூரனுக்கு தண்டனை தராமல், புகார் சொன்ன இளைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டனர். அன்றைக்கே அவனைத் தண்டித்திருந்தால், இன்று இப்படி நடந் திருக்காது!

ஒன்று கிருத்துவர்கள் மாற வேண்டும் அல்லது கிருத்துவம் மற்றப்பட வேண்டும். இத்தகைய குற்றங்களை வளர்த்துக் கொண்டு, பாதிரிகளை மறைத்துக் கொண்டு வாழ்ந்து வருவது, கிருத்துவர்களுக்கும் நல்லதல்ல. இந்திய சமூகத்திற்கும் ஒவ்வாதது.

தப்பியோடிய ஸ்டீபன் ராஜாவும், ரூமில் மறைந்து கொண்ட அருளானந்தனும்: மைதீன் மட்டுமல்லாமல், 10-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களை இவன் ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்திய விஷயமும் தெரியவந்துள்ளது. இது முழு உண்மை என்று தெரிந்ததும்தான், அனைத்து ஊர் மக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை முற்றுகையிட்டோம். ஸ்டீபன் ராஜா தப்பி ஓடிட்டான். தாளாளர் அருளானந்து ரூமுக்குள்ளேயே அடைந்துவிட்டார். சற்று நேரத்தில் போலீஸார் வந்து பாதிரியார் அறையை உடைக்க… உள்ளே ‘டிரிப்பிள் எக்ஸ்’ ரக சி.டி-க்கள், போதை மாத்திரைகள், மயக்கம் வரவழைக்கும் ஸ்பிரே, கத்தை கத்தையாக செக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றியுள்ளனர்[16]. காவல் துறையினர் ஸ்டீபனையும், அவனுக்கு உதவியவர்களையும் உடனே கைது செய்யவேண்டும். இல்லையென்றால், பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்!’ என்றனர் கோபக் கொந்தளிப்புடன்.

கிருத்துவக் கற்பழிப்பு ஏன் இப்படி தொடர்கிறது என்று கிருத்துவர்கள் ஆராய்ச்சி செய்யாமல் அல்லது செய்தும், அதனை வெளியிடாமல், தங்களது குற்றங்களை மறைத்துக் கொண்டிருந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று கீழ்கண்ட இடுகையில் “தமிழ் எவாஞ்செலிகல் லூத்தரன் சர்ச்சில் நடப்பதென்னகிருத்துவ சாமியார்கள் கருப்பு ஆடுகளாக மாறி, கற்பழிப்பு,செக்ஸ்வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவதேன்?[17], எடுத்துக் காட்டியிருந்தேன்.

 பாதிரக்குடி கிராமவாசியான அந்தோணி, ‘பாதிரியார் ஸ்டீபன் பண்ணின பாவம், உண்மை. இவர்மேல் ஏற்கெனவே ‘பாலியல்’ தொடர்பான குற்றச்சாட்டு வந்தபோது, இதே ஊர்க்காரங்கதான் ‘பாதிரியாரை அவமானப்படுத்தக் கூடாது’ன்னு மூடி மறைச்சுட்டாங்க[18]. இரவு மாணவிகளும் பள்ளியிலேயே தங்கியிருப்பாங்க. ஆனா, தூங்குறதுக்கு தாளாளர் அருளானந்து மேற்பார்வையிலுள்ள ஹாஸ்டலுக்கு வந்துடறதால, நல்ல வேளையா தப்பிச்சிருக்காங்க..!” என்றார்.

கூட்டாக செக்ஸ் வேலை செய்யும் கூட்டம்: திருப்புனவாசல் இன்ஸ்பெக்டர் விடுப்பில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்கும் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சுப்பையனிடம் பேசினோம். ‘பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா மீது புகார் வந்ததும், உடனே பள்ளியில் ரெய்டு நடத்தி னோம். தலைமையாசிரியர் அப்படி நடந்துகொண்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. பாதிரியாரின் டிரைவர் பிரித்லினும் இதற்கு உதவியுள்ளான் என்பது தெரிந்தது. அவனையும் மேலும் சிலரையும் கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள பாதிரியாரை தேடிவருகிறோம்!’ என்றார்.

Parishes Clergy Year of Birth &
Ordination
Address
 Padregudi   Fr. S.Arulanandu
  Parish Priest & Correspondent    
62-96   St.James Church,
  Padregudi post, Ponbethi -Via,
  Pudukottai Dt-614 629.
  Cell: 9865290550
  Fr. R.John Peter
  Assistant Parish Priest     
79-08  
  Fr. S.George Stephen
  Headmaster In-charge       
71-06   R.C.High School,
  Padregudi post, Ponbethi -Via,
  Pudukottai Dt – 614 629.

கற்பழித்து விட்டு ஐந்து-பத்தாண்டுகள் கழித்து, நான் அவ்வாறு செய்யவில்லை என்று புளுகுவது[19], சாட்சிகளை களைப்பது, ஆதாரங்களை அழிப்பது, தமது பணபலத்தை உபயோகித்து ஊடகங்களில் விவரங்கள் வராமல் தடுப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபடும் செக்ஸ்-கிருத்துவ குற்றவாளிகள்.

 மாணவனிடம் சில்மிஷம் : பாதிரியார் கைது: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ்.  இவரது மகன் ராஜதுரை (15) தச்சங்குறிச்சியில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி முடிந்து பஸ்சுக்காக சக மாணவர்களுடன் பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.  அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு பாதிரியாரிடம் ராஜதுரை லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டார். சிறிது தொலைவு சென்றவுடன் மாணவன் ராஜதுரையை பைக்கின் முன்புறம் அமர வைத்து பாதிரியார் பைக்கை ஓட்டினார். அப்போது மாணவனை கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது உள்ளிட்ட சில்மிஷங்களில் ஈடுபட்டார். இதனால் அதிர்ந்து போன ராஜதுரை கோமாபுரம் பஸ் நிறுத்தம் வந்தவுடன், சாவியை எடுத்து பைக்கை ஆப் செய்து விட்டு, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். இதனால் சுதாரித்துக்கொண்ட பாதிரியார், மாணவரிடமிருந்து சாவியை பறித்து மீண்டும் பைக்கை வேகமாக கிளப்பிச்சென்றார்.

Amorous clergyman in dock for fondling boy

 A clergyman belonging to the Thanjavur diocese was arrested for reportedly misbehaving with a class 10 boy who travelled on his motorcycle[20].

The 15-year-old boy, son of Ramaraj of Aravampatti village and studying in class 10 at Holy Mary higher secondary school at Thachangkurichi, was waiting for a bus at the bus stop with his schoolmates on Friday evening to return home.

When he saw the priest riding a motorbike, he hesitantly asked for a ‘lift’.

The clergyman generously obliged and made the boy sit on the fuel tank. But he reportedly misbehaved with the boy by kissing and hugging him during the ride.

The shocked boy raised an alarm when the bike reached Komapuram bus stop and screamed for help. He also switched off the motorbike by removing the key.

The priest snatched the key and sped away with him before the locals could come to the boy’s rescue.
The public passed on the information to the drivers at the taxi stand in Gandarvakottai while a few of them chased the priest on their motorcycles.

They intercepted the priest and rescued the boy near the Gandarvakottai taxi stand. They also handed over the priest to the police station.

The priest was identified as George Stephen (40) belonging to Thanjavur diocese.

Subsequently, the police registered a case under various sections, including misbehaving with the boy and threatening to murder him.

இதனை பார்த்த அப்பகுதியினர் கந்தர்வகோட்டையில் உள்ள டாக்சி ஸ்டாண்டுக்கு தகவல் கொடுத்தனர். ஒரு சிலர் பைக்கில் விரட்டினர். கந்தர்வகோட்டை டாக்சி ஸ்டாண்டு அருகே பைக்கில் விரட்டி வந்தவர்கள் பாதிரியாரை, மாணவனுடன் மடக்கினர்.  பாதிரி யாரை பிடித்து கந்தர்வகோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் எஸ்.ஐ. கேசவமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, அவரது பெயர் ஜார்ஜ் ஸ்டீபன் (40) என்பதும், தஞ்சை மறை மாவட்டத்தில் பாதிரியாராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்[21]. அவர் மீது மாணவனிடம் முறைதவறி நடத்தல், கொலை மிரட்டல் உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.அந்த ஜார்ஜ் ஸ்டீபனும், இந்த ஜார்ஜ் ஸ்டீபனும் ஒன்றா?

ஒருவேளை, ஊட்டி பாதிரி மாதிரி, அங்கிருந்து இடமாற்றம் செய்வித்து, இங்கு வந்து தனது வேளையை தொடர்ந்திருக்கிறானா?

ஊடகங்கள், சில நேரங்களில் இப்படி செய்தியைப் போட்டுவிட்டு, பிறகு என்ன நடந்தது என்று எடுத்துக் காட்டுவதில்லை.

நித்தியிடம் காட்டும் அக்கரையை, இவர்களிடம் காட்டுவதில்லை!

ஒருவேளை, இவர்களுக்கு அவ்வாறு இருக்கும் படி, கர்த்தர் ஆணையிட்டுள்ளாரா?

வாடிகனிடமிருந்து கட்டுப்பாடுகள் திணிக்கப்படுகின்றனவா?

பிறகு ஏன், இப்படி பாரபட்சமாக ஊடகக் காரர்கள் நடந்து கொள்கிறார்கள்?

ஒருவேளை, சிலர் புகார் சொவதைப் போல, ஊடகத்துறை கிருத்துவர்களால் அடக்கியாளப்பட்டு வருகிறாதா?

பெரும்பாலான ஊடகக் காரர்கள் கிருத்துவர்களாக இருக்கிறார்களா?

அதனால், இப்படி உண்மைகளை மறௌஇக்கிறார்களா?

பிறகென்ன, செக்யூலரிசம், வெங்காயம், தக்காளி எல்லாம் -எல்லாமே நாறும் கருவாடாக இருக்கும் போது!

வலுக்கட்டாயமாக, சிறுவர்-சிறுமியர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றாஞ்சாட்டப்படும் டான் பாஸ்கோ[22] போன்ற கிருத்துவ சாமியார்களை ஆதரித்து வருவதால், கிருத்துவப் பாதிரிகளுக்கு அத்தகைய எண்ணங்கள் வளர்கின்றனவா? அல்லது அவரே அவ்வாறு செய்ததால், நாமும், அப்படியே செய்தால் ஒன்று தவறில்லை அல்லது தம்மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மனப்பாங்கு[23]வருகிறதா?


[12] மாணவிகளுக்கு எங்கே புத்தி போயிற்று, படிக்கும்வேலையில் செக்ஸ்-பாதிரியுடன் உட்கார்ந்து கொண்டு, அவன் அடிக்கும் செக்ஸ்-கமண்டுகளை கேட்டு சரசிக்க வேண்டிய அவசியம் என்ன?

https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-rules/

[16] கைது செய்யப்படும் செக்ஸ்-பாதிரிகளிம் குறிப்பிட்ட கெட்ட நடத்தைகள், சீரழிவுகள் முதலியவற்றௌஇக் காணலாம். ஆகவே, அவர்களை சமூகத்தில் வைத்திருப்பது, எய்ட்ஸ் போன்ற கிருமிகளை வைத்து வளர்ப்பதற்கு சமம்.

https://christianityindia.wordpress.com/2012/03/11/yet-another-sex-catholic-fugitive-priest/

[18] இதே மாதிரி அமெரிக்கப் பாதிரியே, ஊட்டியில் மறைந்திருந்தான்.

https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/